பாடல் 1089 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனன தாத்த தனதனன தாத்த தனதனன தாத்த ...... தனதான |
இருவினைக ளீட்டு மிழவுபடு கூட்டை யெடுமெடென வீட்டி ...... லனைவோரும் இறுதியிடு காட்டி லழுதுதலை மாட்டில் எரியஎரி மூட்டி ...... யிடுமாறு கரியஇரு கோட்டு முரணெருமை மோட்டர் கயிறிறுக மாட்டி ...... யழையாமுன் கனகமணி வாட்டு மருவுகழல் பூட்டு கழலிணைகள் காட்டி ...... யருள்வாயே பருவமலை நாட்டு மருவுகிளி யோட்டு பழையகுற வாட்டி ...... மணவாளா பகைஞர்படை வீட்டில் முதியகன லூட்டு பகருநுதல் நாட்ட ...... குமரேசா அருமறைகள் கூட்டி யுரைசெய்தமிழ் பாட்டை அடைவடைவு கேட்ட ...... முருகோனே அலைகடலி லீட்ட அவுணர்தமை யோட்டி அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே. |
* முருகன் சிவனது அம்சமே ஆதலால், சிவனைப் போன்று அக்னி உள்ள நெற்றிக் கண் முருகனுக்கும் உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1089 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டி, தாத்த, தனதனன, நெருப்பை, நெற்றிக், பெருமாளே, இருந்த, வீட்டில், மூட்டி, மாட்டி, கேட்ட