பாடல் 1074 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
தாணதிகெளளை
தாளம் - சதுஸ்ர அட - 12
தாளம் - சதுஸ்ர அட - 12
தனந்த தானந் தனதன தானன ...... தனதான |
இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் ...... எழில்நீறும் இலங்கு நூலும் புலியத ளாடையு ...... மழுமானும் அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு ...... முடிமீதே அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய ...... குருநாதா உசந்த சூரன் கிளையுடன் வேரற ...... முனிவோனே உகந்த பாசங் கயிறொடு தூதுவர் ...... நலியாதே அசந்த போதென் துயர்கெட மாமயில் ...... வரவேணும் அமைந்த வேலும் புயமிசை மேவிய ...... பெருமாளே. |
விருப்பமுடன் ஏறுகின்ற ரிஷப வாகனமும், கஜமுகாசுரனின் தோலை உரித்துப் போர்த்திய போர்வையும், அழகிய திருநீறும், விளங்குகின்ற பூணூலும், புலித்தோல் ஆடையும், கோடரியும், மானும், காதுகளில் அசைந்தாடும் தோடுகளும், சடையிலே தரித்த அழகிய கொன்றை மாலையும், தலைமுடி மீது அணிந்த ஈசனாம் சிவபெருமான் பரிவோடு போற்றிப் பரவிய குருநாதனே, கர்வம் மிக்க சூரன் தன் சுற்றத்தாருடன் வேரற்றுப் போகும்படி கோபித்தவனே, விருப்போடு பாசக்கயிறை எடுத்து வந்த யமதூதர்கள் சோர்வு அடையாமல் என் உயிர் கொண்டு செல்லும் சமயம் நான் அயரும்போது எனது துயரங்கள் நீங்குமாறு சிறந்த மயில் மேல் நீ வந்தருள வேண்டும். அழகிய வேலினை தோளில் வைத்திருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1074 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, பெருமாளே, சூரன், மேவிய, அணிந்த, போர்வையும்