பாடல் 1051 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
நிலவில் மார னேறூதை யசைய வீசு மாராம நிழலில் மாட மாமாளி ...... கையின்மேலாம் நிலையில் வாச மாறாத அணையில் மாத ராரோடு நியதி யாக வாயார ...... வயிறார இலவி லூறு தேனூறல் பருகி யார வாமீறி யிளகி யேறு பாடீர ...... தனபாரம் எனது மார்பி லேமூழ்க இறுக மேவி மால்கூரு கினுமு னீப சீர்பாத ...... மறவேனே குலவி யோம பாகீர திமிலை நாதர் மாதேவர் குழைய மாலி காநாக ...... மொடுதாவிக் குடில கோம ளாகார சடில மோலி மீதேறு குமர வேட மாதோடு ...... பிரியாது கலவி கூரு மீராறு கனக வாகு வேசூரர் கடக வாரி தூளாக ...... அமராடுங் கடக போல மால்யானை வனிதை பாக வேல்வீர கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. |
நிலவின் வெளிச்சத்தில், மன்மதன் ஏறிவரும் தென்றல் காற்று அசைந்து வீசுகின்ற பூஞ்சோலை நிழலில், மாடங்கள் கூடிய சிறந்த மாளிகையில் மேல் உள்ள மாடத்தில், நறு மணம் நீங்காத படுக்கையில் பெண்களோடு, காலம் தவறாத ஒழுக்கத்துடன், வாய் நிரம்பவும், வயிறு நிரம்பவும், இலவம் பூப்போன்ற சிவந்த வாயிதழில் ஊறி வருகின்ற தேன் போல் இனிக்கும் ஊறலை உண்டு, நிரம்பிய என் ஆசை அளவு கடந்து பொங்கி எழ, நெகிழ்ந்து, முற்பட்டு எழுந்துள்ளதும், சந்தனம் அணிந்துள்ள தனபாரம் என்னுடைய மார்பில் அழுந்தி முழுகும்படி கட்டி அணைத்து மோகம் மிகுந்திருப்பினும், உன்னுடைய கடம்பு அணிந்த அழகிய திருவடிகளை மறக்க மாட்டேன். சிறந்த ஆகாய கங்கையைச் சூடியுள்ள தலைவர் மகா தேவர் (ஆகிய சிவ பெருமான்) மனம் மகிழ்ச்சியில் மாலையாக அணிந்துள்ள பாம்பின் மேல் தாவி, வளைந்துள்ள அழகிய வடிவுள்ளதான ஜடாபார முடியின் மீது தவழ்ந்து ஏறும் குழந்தைக் குமரனே, குறப் பெண்ணாகிய வள்ளியோடு பிரியாமல் கலந்து இன்பம் மிகக் கொள்ளும் பன்னிரண்டு பரந்த தோள்களை உடையவனே, சூரர்களுடைய சேனைக்கடல் பொடியாகும்படி சண்டை செய்கின்றவனே, மதம் பெருகும் கன்னங்களை உடைய சிறந்த வெள்ளை யானையாகிய ஐராவதம் வளர்த்த மாதாகிய தேவயானையின் பங்கனே, வேல் வீரனே, கருணைப் பெரு மலையே, தேவர்கள் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1051 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானான, சிறந்த, அணிந்துள்ள, அழகிய, நிரம்பவும், மேல், பெருமாளே, நிழலில், தனபாரம்