பாடல் 1038 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தானா தானா தானா தானா தானா தானத் ...... தனதான |
ஊனே தானா யோயா நோயா லூசா டூசற் ...... குடில்பேணா ஓதா மோதா வாதா காதே லோகா சாரத் ...... துளம்வேறாய் நானே நீயாய் நீயே நானாய் நானா வேதப் ...... பொருளாலும் நாடா வீடா யீடே றாதே நாயேன் மாயக் ...... கடவேனோ வானே காலே தீயே நீரே பாரே பாருக் ...... குரியோனே மாயா மானே கோனே மானார் வாழ்வே கோழிக் ...... கொடியோனே தேனே தேனீள் கானா றாய்வீழ் தேசார் சாரற் ...... கிரியோனே சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. |
* தேனாறு பாயும் ஊர் குன்றக்குடியாதலால், இப்பாடல் அத்தலத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1038 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, மாறி, விரும்பி, தேனாறு, என்றும், பொருந்திய, கடவேனோ, கோழிக், பெருமாளே