பாடல் 1036 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தானந் தனதன தானந் தனதன தானந் தனதன ...... தனதான |
தீயும் பவனமு நீருந் தரணியும் வானுஞ் செறிதரு ...... பசுபாசத் தேகந் தனைநிலை யேயொன் றிருவினை தீருந் திறல்வினை ...... யறியாதே ஓயும் படியறு நூறும் பதினுறழ் நூறும் பதினிரு ...... பதுநூறும் ஓடுஞ் சிறுவுயிர் மீளும் படிநல யோகம் புரிவது ...... கிடையாதோ வேயுங் கணியும்வி ளாவும் படுபுன மேவுஞ் சிறுமிதன் ...... மணவாளா மீனம் படுகட லேழுந் தழல்பட வேதங் கதறிய ...... வொருநாலு வாயுங் குலகிரி பாலுந் தளைபட மாகந் தரமதில் ...... மறைசூரன் மார்புந் துணையுறு தோளுந் துணிபட வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே. |
* நாழிகை ஒன்றுக்கு 360 சுவாசங்கள். ஒரு நாளில் உள்ள 60 நாழிக்கு (24 மணி நேரத்துக்கு), 21,600 சுவாசங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1036 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நூறும், ஆகிய, தானந், தனதன, செய்த, சுவாசங்கள், மரமும், இரண்டு, பெருமாளே, பதின், மடங்கு