பாடல் 1035 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
ஸிந்துபைரவி
தாளம் - ஆதி
தாளம் - ஆதி
தானந் தனதன தானந் தனதன தானந் தனதன ...... தனதான |
ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி யூருங் கருவழி ...... யொருகோடி ஓதும் பலகலை கீதஞ் சகலமு மோரும் படியுன ...... தருள்பாடி நானுன் திருவடி பேணும் படியிரு போதுங் கருணையில் ...... மறவாதுன் நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி நாடும் படியருள் ...... புரிவாயே கானுந் திகழ்கதி ரோனுஞ் சசியொடு காலங் களுநடை ...... யுடையோனுங் காருங் கடல்வரை நீருந் தருகயி லாயன் கழல்தொழு ...... மிமையோரும் வானிந் திரனெடு மாலும் பிரமனும் வாழும் படிவிடும் ...... வடிவேலா மாயம் பலபுரி சூரன் பொடிபட வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே. |
* ஒன்பது துவாரங்கள்: இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1035 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானந், யான், துவாரங்கள், தனதன, உன்னுடைய, பெருமாளே, சூரன், ஒன்பது