பாடல் 1021 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான |
வினைத்திரளுக் கிருப்பெனவித் தகப்படவிற் சலப்பிலமிட் டிசைக்குமிடற் குடிற்கிடைபுக் ...... கிடுமாய விளைப்பகுதிப் பயப்பளவுற் றமைத்ததெனக் கருத்தமைவிற் சகப்பொருள்மெய்க் குறப்பருகக் ...... கருதாதே எனக்கெதிரொப் பிசைப்பவரெத் தலத்துளரெச் சமர்த்தரெனப் புறத்துரையிட் டிகழ்ச்சியினுற் ...... றிளையாதுன் எழிற்கமலத் திணைக்கழலைத் தமிழ்ச்சுவையிட் டிறப்பறஎய்த் திடக்கருணைத் திறத்தெனைவைத் ...... தருள்வாயே சினத்தைமிகுத் தனைத்துலகத் திசைக்கருதிக் கடற்பரவித் திடத்தொடதிர்த் தெதிர்த்திடலுற் ...... றிடுசூரன் சிரத்துடன்மற் புயத்தகலத் தினிற்குருதிக் கடற்பெருகச் சிறப்புமிகத் திறத்தொடுகைத் ...... திடும்வேலா கனத்தமருப் பினக்கரிநற் கலைத்திரள்கற் புடைக்கிளியுட் கருத்துருகத் தினைக்குளிசைத் ...... திசைபாடி கனிக்குதலைச் சிறுக்குயிலைக் கதித்தமறக் குலப்பதியிற் களிப்பொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1021 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்ததனத், கூட்டமும், அழகிய, கடல், நான், பெருமாளே, கொண்ட, உனது