பாடல் 1019 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்தானத் தாத்தத் தனதன தத்தானத் தாத்தத் தனதன தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான |
சிற்றாயக் கூட்டத் தெரிவையர் வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழி சற்றேறப் பார்த்துச் சிலபணி ...... விடையேவிச் சிற்றாபத் தாக்கைப் பொருள்கொடு பித்தேறிக் கூப்பிட் டவர்பரி செட்டாமற் றூர்த்தத் தலைபடு ...... சிறுகாலை உற்றார்பெற் றார்க்குப் பெரிதொரு பற்றாயப் பூட்டுக் கயிறுகொ டுச்சாயத் தாக்கைத் தொழிலொடு ...... தடுமாறி உக்காரித் தேக்கற் றுயிர்நழு விக்காயத் தீப்பட் டெரியுட லுக்கேன்மெய்க் காட்டைத் தவிர்வது ...... மொருநாளே வற்றாமுற் றாப்பச் சிளமுலை யிற்பால்கைப் பார்த்துத் தருமொரு மைக்காமக் கோட்டக் குலமயில் ...... தருபாலா மத்தோசைப் போக்கிற் றயிருறி நெய்பாலுக் காய்ச்சிக் கிருபதம் வைத்தாடிக் காட்டிப் பருகரி ...... மருகோனே கற்றாவிற் காட்டிக் கரைதுறை நற்றாயிற் காட்டிப் புகழ்கலை கற்றார்சொற் கேட்கத் தனிவழி ...... வருவோனே கைச்சூலக் கூற்றைக் கணைமத னைத்தூள்பட் டார்ப்பக் கனல்பொழி கர்த்தாவுக் கேற்கப் பொருளருள் ...... பெருமாளே. |
* சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1019 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டிப், கொண்ட, தனதன, தாத்தத், தத்தானத், சிறந்த, காட்டி, தயிர், வந்து, புலவர், கொண்டிருந்த, என்னும், பொய்யாமொழிப், காட்டு, தனிவழி, பார்த்துத், பெருமாளே, வேண்டிய, உள்ள, கொண்டு, தந்த