பாடல் 1018 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்தானத் தாத்தத் தனதன தத்தானத் தாத்தத் தனதன தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான |
கற்பார்மெய்ப் பாட்டைத் தவறிய சொற்பாகைக் காட்டிப் புழுகொடு கஸ்தூரிச் சேற்றைத் தடவிய ...... இளநீரைக் கட்சேலைக் காட்டிக் குழலழ கைத்தோளைக் காட்டித் தரகொடு கைக்காசைக் கேட்டுத் தெருவினில் ...... மயில்போலே நிற்பாருக் காட்பட் டுயரிய வித்தாரப் பூக்கட் டிலின்மிசை நெட்டூரக் கூட்டத் தநவர ...... தமுமாயும் நெட்டாசைப் பாட்டைத் துரிசற விட்டேறிப் போய்ப்பத் தியருடன் நெக்கோதிப் போற்றிக் கழலிணை ...... பணிவேனோ வெற்பால்மத் தாக்கிக் கடல்கடை மைச்சாவிக் காக்கைக் கடவுளை விட்டார்முக் கோட்டைக் கொருகிரி ...... யிருகாலும் விற்போலக் கோட்டிப் பிறகொரு சற்றேபற் காட்டித் தழலெழு வித்தார்தத் வார்த்தக் குருபர ...... னெனவோதும் பொற்பாபற் றாக்கைப் புதுமலர் பெட்டேயப் பாற்பட் டுயரிய பொற்றோளிற் சேர்த்துக் கருணைசெ ...... யெனமாலாய்ப் புட்கானத் தோச்சிக் கிரிமிசை பச்சேனற் காத்துத் திரிதரு பொற்பூவைப் பேச்சுக் குருகிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1018 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டி, தத்தானத், தனதன, தாத்தத், நீண்ட, அழகிய, பெருமாளே, பூஜையை, டுயரிய, பாட்டைத், தவறிய, காட்டித், காத்துத்