பாடல் 1010 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன ...... தனதான |
அரிசன பரிசஅ லங்க்ரு தாம்ருத கலசமு மதனுய ரம்பொன் மாமுடி யதுமென இளைஞர்கள் நெஞ்சு மாவியு ...... மொருகோடி அடைபடு குடயுக ளங்க ளாமென ம்ருகமத களபம ணிந்த சீதள அபிநவ கனதன மங்கை மாருடன் ...... விளையாடி இரவொடு பகலொழி வின்றி மால்தரு மலைகட லளறுப டிந்து வாயமு தினிதென அருளஅ ருந்தி யார்வமொ ...... டிதமாகி இருவரு மருவிய ணைந்து பாழ்படு மருவினை யறவும றந்து னீள்தரு மிணைமல ரடிகள்நி னைந்து வாழ்வது ...... மொருநாளே சுரர்குல பதிவிதி விண்டு தோலுரி யுடைபுனை யிருடிக ளண்ட ரானவர் துதிசெய எதிர்பொர வந்த தானவ ...... ரடிமாள தொலைவறு மலகையி னங்க ளானவை நடமிட நிணமலை துன்ற வேயதில் துவரிது புளியிது தொய்ந்த தீதிது ...... இதுவீணால் பருகுத லரியது கந்த தீதிது உளதென குறளிகள் தின்று மெதகு பசிகெட வொருதனி வென்ற சேவக ...... மயில்வீரா பகிரதி சிறுவவி லங்க லூடுறு குறமகள் கொழுநப டர்ந்து மேலெழு பருவரை யுருவஎ றிந்த வேல்வல ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1010 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தானன, பாகம், தந்த, இரண்டு, அடியோடு, சொல்லும்படியாய், பெருமாளே, வந்த, தீதிது, என்றும்