பாடல் 1006 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
ஸஹானா
தாளம் - அங்கதாளம் - 7 1/2
- எடுப்பு - 1/2 தள்ளி
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 7 1/2
- எடுப்பு - 1/2 தள்ளி
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
பகிர நினைவொரு தினையள விலுமிலி கருணை யிலியுன தருணையொ டுதணியல் பழநி மலைகுரு மலைபணி மலைபல ...... மலைபாடிப் பரவு மிடறிலி படிறுகொ டிடறுசொல் பழகி யழகிலி குலமிலி நலமிலி பதிமை யிலிபவு ஷதுமிலி மகிமையி ...... லிகுலாலன் திகிரி வருமொரு செலவினி லெழுபது செலவு வருமன பவுரிகொ டலமரு திருக னுருகுத லழுகுதல் தொழுகுதல் ...... நினையாத திமிர னியல்பிலி யருளிலி பொருளிலி திருடன் மதியிலி கதியிலி விதியிலி செயலி லுணர்விலி சிவபத மடைவது ...... மொருநாளே மகர சலநிதி முறையிட நிசிசரன் மகுட மொருபது மிருபது திரள்புய வரையு மறவொரு கணைதெரி புயல்குரு ...... ந்ருபதூதன் மடுவில் மதகரி முதலென வுதவிய வரத னிருதிறல் மருதொடு பொருதவன் மதலை குதலையின் மறைமொழி யிகழிர ...... ணியனாகம் உகிரி னுதிகொடு வகிருமொ ரடலரி திகிரி தரமர கதகிரி யெரியுமிழ் உரக சுடிகையில் நடநவி லரிதிரு ...... மருகோனே உருகு மடியவ ரிருவினை யிருள்பொரு முதய தினகர இமகரன் வலம்வரும் உலக முழுதொரு நொடியினில் வலம்வரு ...... பெருமாளே. |
மற்றவரோடு பகிர்ந்து உண்ணும் நினைவு ஒரு தினையளவும் இல்லாதவன் யான், இரக்கமே இல்லாதவன் யான், உனது திருத்தலங்களாகிய திருவண்ணாமலை, திருத்தணிகை, பழநிமலை, சுவாமிமலை, திருச்செங்கோடு, மற்றும் பல மலைகளைப் பாடி போற்றுகின்ற திறம் இல்லாதவன் யான், வஞ்சனையும் மாறுபாடும் நிறைந்த பேச்சையே பேசப் பழகியவன் யான், அழகற்றவன் யான், நற்குலம் அற்றவன் யான், நற்குணம் அற்றவன் யான், பக்தி இல்லாதவன் யான், பெருந்தன்மை இல்லாதவன் யான், எவ்விதப் பெருமையும் இல்லாதவன் யான், குயவனுடைய சக்கரம் சுழலும் ஒரு சுழற்சி வேகத்திற்குள் எழுபது சுற்று வரும் மனச் சுழற்சி கொண்டு அலை பாய்ந்து வேதனைப்படும் கோணல் புத்தி உடையவன் யான், உள்ளம் உருகல், வாய்விட்டு அழுதல், உடல் வணங்குதல் இம்மூன்றின் நினைப்பு கிடையாத ஆணவத் திமிர் உள்ளவன் யான், நல்ல தன்மை அற்றவன் யான், அருளற்றவன் யான், பொருளற்றவன் யான், திருட்டுப்புத்தி உள்ளவன் யான், அறிவில்லாதவன் யான், நற்கதி இல்லாதவன் யான், தலை எழுத்தும் நன்றாக இல்லாதவன் யான், நற்செய்கைகள் செய்யும் உணர்ச்சி இல்லாதவன் யான், இத்தகைய யான் சிவபதம் அடையக் கூடிய ஒரு நாளும் உண்டோ? (இதன் பிறகு திருமாலைப் பற்றிய விவரமான வர்ணனை வருகிறது) மகர மீன்கள் உள்ள கடல் (அம்பின் வேகம் தாங்காமல்) ஓலமிட, அரக்கன் ராவணனின் பத்து கி¡£டங்களும் இருபது திண்ணிய புயமலைகளும் அற்றுப் போய் கீழே விழுமாறு ஒரு பாணத்தைத் தெரிந்து செலுத்திய மேகவண்ண ராமனும், குரு நாட்டைச் சேர்ந்த மன்னர்களாகிய பாண்டவர்க்குத் தூதனாகச் சென்ற கண்ணனும், தடாகத்தில் மதயானை கஜேந்திரன்ஆதிமூலமே என ஓலமிட வந்துதவிய வரதராஜனும், இரண்டு திண்மையான மருத மரங்களைச் சாடி முறித்த கண்ணனும், குழந்தை பிரகலாதனது குதலைச் சொற்களாக வந்த ஓம் நமோ நாராயணாய என்னும் வேதமொழியினை இகழ்ந்த இரணியனது உடலை நகத்தின் நுனி கொண்டு பிளந்த ஒப்பற்ற வலிமை வாய்ந்த நரசிம்ம மூர்த்தியும் சக்ராயுதத்தை ஏந்தியவனும், மரகதப் பச்சை மாமலைபோல் மேனியை உடையவனும், நெருப்பைக் கக்குகின்ற காளிங்கன் என்ற பாம்பின் தலையுச்சியில் நடனம் செய்த கண்ணனும் ஆகிய விஷ்ணு மூர்த்தி திருமாலின் அழகிய மருமகனே, உள்ளம் உருகும் அடியாரின் நல்வினை, தீவினை ஆகிய இருவினை இருளை விலக்க உதயமாகும் ஞான சூரியனே, பனிக்கிரணங்கள் உடைய சந்திரன் சுற்றி வருகின்ற இந்த உலகத்தை ஒரே நொடியில் சுற்றிவந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1006 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - யான், தனதன, இல்லாதவன், கண்ணனும், தகதிமி, அற்றவன், ஓலமிட, திகிரி, ஆகிய, உள்ளவன், உள்ளம், சுழற்சி, கொண்டு, பெருமாளே