பாடல் 1005 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
காம்போதி
தாளம் - அங்கதாளம் - 7 1/2
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 7 1/2
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
நெடிய வடகுவ டிடியவு மெழுகிரி நெறுநெ றெனநெரி யவுமுது பணிபதி நிபிட முடிகிழி யவுநில மதிரவும் ...... விளையாடும் நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும் நினது கருணையு முறைதரு பெருமையும் நிறமு மிளமையும் வளமையு மிருசர ...... ணமும்நீப முடியு மபிநவ வனசரர் கொடியிடை தளர வளர்வன ம்ருகமத பரிமள முகுள புளகித தனகிரி தழுவிய ...... திரடோளும் மொகுமொ கெனமது கரமுரல் குரவணி முருக னறுமுக னெனவரு வனபெயர் முழுது மியல்கொடு பழுதற மொழிவது ...... மொருநாளே கொடிய படுகொலை நிசிசர ருரமொடு குமுகு மெனவிசை யுடனிசை பெறமிகு குருதி நதிவித சதியொடு குதிகொள ...... விதியோடக் குமுறு கடல்குடல் கிழிபட வடுமர மொளுமொ ளெனஅடி யொடலறி விழவுயர் குருகு பெயரிய வரைதொளை படவிடு ...... சுடர்வேலா இடியு முனைமலி குலிசமு மிலகிடு கவள தவளவி கடதட கனகட இபமு மிரணிய தரணியு முடையதொர் ...... தனியானைக் கிறைவ குருபர சரவண வெகுமுக ககன புனிதையும் வனிதைய ரறுவரும் எனது மகவென வுமைதரு மிமையவர் ...... பெருமாளே. |
* சேவல் வாய்விட்டுக் கூவுவவதால் சூரியன் உதிப்பது புலவர் கற்பனையில் சேவல் சூரியனை உமிழ்வதாக உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1005 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தகதிமி, சேவல், போல், என்னும், வரும், நெறு, பெருமையும், தழுவிய, பெருமாளே, கிழிபடவும்