சேவல் விருத்தம் - 6
சின்டுப்கைரவி - கண்ட சாபு
பங்கமாகிய விட புயங்கமா படமது பறித்து சிவத் அருந்தி பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள் புரி பச்சை கலாப மயிலை துங்கமாய் அன்புற்று வன்புற்ற் அடர்ந்துவரு துடரும் பிரேத பூத தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும் துண்டப் படக் கொத்துமாம் மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி வஞ்ஜி நான்முகி வராகி மலையரையன் உதவு அமலை திருமுலையில் ஒழுகுபால் மகிழ அமுதுண்ட பாலன் செங்க் கணன் மதலையிடம் இங்குளான் என்னு நர சிங்கமாய் இரணியனுடல் சிந்த உகிரிற்கொடு பிளந்த மால் மருமகன் சேவற் திருத் துவஜமே (மால் மருமகன் சேவற்திருத் துவஜமே) |
கொடுமையைச் செய்யும் விஷமுள்ள, பாம்பின் பெரிய படத்தை, கொத்தி, சினத்துடன் அதை உணவாகக் கொண்டு, வெளி அண்டங்கள் எல்லாவற்றிலும் பறந்து, களி நடனம் புரியும், பச்சை நிறத் தோகைகளை உடைய மயிலுடன், தூய அன்பு கொண்டு, வலிமையுடன், நெருங்கி வரும், தொடர்ந்து வரும், பிணப் பேய்களின் கூட்டங்கள், பிசாசுகளையும், அசுரர் கூட்டங்கள் அனைத்தையும், துண்டு துண்டாகச் சிதறும்படிக் கொத்தும் (அது எது என வினாவினால்) மங்கையும், யாமளையும், குமாரியும், கங்கையாக இருப்பவளும், மாலைகளை அணிந்திருப்பவளும், பொன்னிறமாக இருப்பவளும், கொடி போன்றவளும், நான்கு முகங்களை உடையவளும், வராகியும், இமவான் தந்த அப்பழுக்கற்றவளும், ஆகிய பார்வதி தேவியின் திருமார்பிலிருந்து ஒழுகிய பாலமுதத்தை, மகிழ்ச்சியோடு உண்ட சிறுவன், (திருஞானசம்பந்தர் .. முருகன்) (கோபத்தால்) சிவந்த கண்களை உடைய திருமால், இதோ தூணில் இருக்கிறான் என்று பிரகலாதனால் சுட்டிக் காட்டப்பட்டவன், நரசிங்க அவதாரம் எடுத்து இரணியன் உடலை, ரத்தம் சிந்த கை நகத்தால் பிளந்து சம்காரம் செய்த மகா விஷ்ணுவின் மருமகன் (ஆகிய) குமாரக் கடவுளின் கொடியில் உள்ள சேவலே தான் அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவல் விருத்தம் - 6 - Seval Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மருமகன், வரும், கூட்டங்கள், இருப்பவளும், ஆகிய, உடைய, துவஜமே, பச்சை, சிந்த, மால், பறந்து, கொண்டு