சேவல் விருத்தம் - 7
பீம்பலாச் - கண்ட சாபு
வீறான காரிகதி முன்னோடி பின்னோடி வெங்கட் குறும்புகள் தரும் விடு பேய்களே கழுவன் கொலைசாவு கொள்ளிவாய் வெம் பேய்களைத் துரத்தி பேறான ஏசரவண பவாஏ என்னு மந்திரம் பேசி உச்சாடனத்தார் பிடர் பிடித்துக் கொத்தி நகனுதியினால் உற பிய்ச்சுக் களித் தாடுமாம் மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம் மகோதரம் பெருவியாதி வாத பித்தம் சிலேர்ப்பனம் குட்ட முதலான வல்ல பிணிகளை மாற்றியே சீறாத ஓராறு திருமுக மலர்ந் அடியர் சித்தத் இருக்கு முருகன் சிலைகள் உரு இட அயிலை விடுகுமர குருபரன் சேவற் திருத் துவஜமே (செவற் திருத் துவஜமே குருபரன் சேவற் திருத் துவஜமே) |
மிடுக்குடைய, பைரவர் போகும் வழியில், முன்னும் பின்னும் ஓடி தொடர்ந்து வந்து, சிவந்த கண்களை உடையனவாய் சேஷ்டைகள் புரியும், தனித்திருக்கும் பேய்களையும், கொடிய கழுகுகளையும், வன்மையான கொலைகளுக்கும் சாவுகளுக்கும் காரணமான, நெருப்பைக் கக்கும் வாய்களை உடைய, கொடிய போய்களைத் துரத்திச் சென்று, தவத்தால் கிடைப்பதான, சரவணபவா என்கிற சடாட்சர மந்திரத்தை, சொல்லி, உட்சாடத்தினால் பிரயோகம் செய்யும் வகையில், அவைகளுடைய கழுத்தைப் பிடித்து மூக்கினால் கொத்தி, கூர்மையான நகமுனையினால் பிய்த்து, மகிழ்ச்சியுடன் நடனம் புரியும் (அது எது என வினாவினால்) நீங்காத வியாதியான காக்காய் வலிப்பு, வயிற்று வலி, வயிறு உளைப்பு (சூலை நோய்), பெரு வயிறு, பால் வினை நோய்கள், வாதம் பித்தம், சிலேத்துமம், குஷ்டம், இவை போன்ற, கொடிய நோய்களை நீக்குபவரும், அடியவர்களின் கோடி குறைகள் கருதினாலும் வேறு முனிய அறியாதவரும், தனது ஆறு திருமுகங்களும் மகிழ்ச்சியுடன், தியானிக்கும் அடியவர்களின் உள்ளத்தில் வீற்றிருக்கும் முருகன், கிரவுஞ்ச கிரியும் மற்ற ஏழு மலைகளும் உருவிச் சென்று அழித்த, கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய, குமாரப் பரமேஸ்வரனின், கொடியில் வீற்றிருக்கும் சேவலே தான் அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவல் விருத்தம் - 7 - Seval Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொடிய, திருத், துவஜமே, மகிழ்ச்சியுடன், வயிறு, அடியவர்களின், வீற்றிருக்கும், சென்று, பித்தம், சேவற், முருகன், கொத்தி, புரியும், குருபரன்