சேவல் விருத்தம் - 5
பாகேஸ்ரீ - கண்ட சாபு
தான இடும்புசெயு மோகினி இடாகினி தரித்த வேதாஅள பூதம் சருவ சூனியமும் அங்கிரியினால் உதறித் தடிந்து சந்தோட முறவே கோனாகி மகவானும் வனாள வனாடர் குலவு சிறை மீள அட்ட குலகிரிகள் அசுரர் கிளை பொடியாக வெஞ்ஜிறைகள் கொட்டி எட்டிக் கூவுமாம் மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு மாதேவனற் குருபரன் வானீரம் அவனியழல் காலாய் நவக் கிரகம் வாழ்னாள் அனைத்தும் அவனாம் சேனா பதித் தலைவன் வேதாவினை சிறைசெய் தேவாதி கட் கரசு கட் டேனான மைக்கடலின் மீனானவற் கினியன் சேவற் திருத் துவஜமே (சேவற் திருத் துவஜமே குருபரன் சேவற் திருத் துவஜமே) |
ஒருவரின் தூண்டுதல் இல்லாமல், துன்பங்களை விளைவிக்கும், மோகினி எனும் பெண் பேய்களும் (நடு நிசியில் தனி வழியில் செல்லும் ஆடவரை பிடித்துக்கொள்ளும் இவ்வகை மோகினிப் பேய்), பிணங்களைத் தின்னும் இடாகினிப் பேய்கள், இவைகளுடன் கூடி இருக்கும் வேதாளங்கள் பூதங்கள், எல்லாவிதமான ஏவல் சூன்யங்கள் அனைத்தையும், பாதத்தினால் எடுத்து உதறி, அவைகளை தண்டித்து, இந்திரனும், மகிழ்ச்சியுற்று, மீண்டும் தேவலோகத்திற்கு அதிபனாகி, தேவலோகத்தை அரசு ஆளவும், அந்த தேவர்களுக்கு நேர்ந்த சிறை நீங்கவும், எட்டு திசைகளில் உள்ள மலைகள், அரக்கர்களின் கூட்டங்கள் பொடி பொடியாகப் போகவும் கொடிய சிறகுகளை படபடவென அடித்துக் கொண்டு எட்டிக் குதித்து பெருங் குரலிட்டுக் கூவும் (அது எது என வினாவினால்) பெரிய வாசுகி எனும் நாகப் பாம்பு, எலும்பு மாலை, அருகம்புல் இவைகளை அணிந்துகொண்டு, நடனம் செய்யும் பரமேஸ்வரனுக்கு, நல்ல குரு மூர்த்தி, ஆகாயம், நீர், பூமி, நெருப்பு காற்று முதலான பஞ்ச பூதங்களையும், ஒன்பது கிரகங்களையும் காலம் என்று சொல்லப்படும் தத்துவங்கள் அனைத்தும் எல்லாமாய் இருக்கும் முருகக் கடவுள், தேவ சேனாபதி, பிரம்மனை சிறையில் அடைத்தவரும் தேவ லோக சக்ரவர்த்தி, மது, தேன் போன்று இனிமை உடையவன், இருண்ட கடலில் மீன் உருவத்தில் இருந்த நந்தி தேவருக்கு மகிழ்ச்சியை அளித்தவன் இப்பேற்பட்ட குமாரக் கடவுளின் கொடியில் உள்ள சேவலே தான் அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவல் விருத்தம் - 5 - Seval Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - துவஜமே, திருத், சேவற், எனும், இருக்கும், உள்ள, சிறை, எட்டிக், அனைத்தும், மோகினி, குருபரன்