சேவல் விருத்தம் - 10
மத்யமாவதி - கண்ட சாபு
மகர ஜலனிதி சுவற உரகபதி முடிபதற மலைகள் கிடு கிடு கிடெனவே மகுடகுட வடசிகரி முகடு பட படபடென மதகரிகள் உயிர் சிதறவே ககனமுதல் அண்டங்கள் கண்ட துண்டப்பட கர்ஜித் இரைத் அலறியே காரையாழின் நகரர் மாரைப் பிளந்து சிற கைக்கொட்டி நின்றாடுமாம் சுகவிமலை அமலை பரை இமையவரை தரு குமரி துடியிடை அனகை அசலையாள் சுதன் முருகன் மதுரமொழி உழைவனிதை இபவனிதை துணைவன் எனதிதய நிலையோன் திகுட திகுட திதிகுட தகுடதி தகுட திகுட செக்கண செகக் கண என திருனடனம் இடுமயிலில் வருகுமர குருபரன் சேவற் திருத் துவஜமே (துவஜமே, சேவற் திருத் துவஜமே சேவற் திருத் துவஜமே) |
மகர மீன்கள் வாழும் கடல் வற்றிப் போகவும், சர்ப்ப ராஜனான ஆதிசேஷனின் ஆயிரம் முடிகளும் பதறவும், மலைகள் கிடு கிடு என நடுங்கவும், சிகரங்களைக் கொண்ட, குடம் போன்ற திரட்சி உடைய, மேரு மலையின், உச்சிகள் படபடென நடுங்கவும், மத யானைகளின் உயிர் பயத்தால் பிரியவும், தேவலோகம் முதல், எல்லா உலகங்களும் துண்டு துண்டாகச் சிதறவும், பெருத்த ஆரவாரம் செய்து, சமுத்திரக் கரையில் உள்ள காரையாழி நகரில் வாழ்ந்த அசுரர்களின், மார்பைப் பிளந்து தன்னுடைய சிறகுகளை அடித்துக்கொண்டு களிப்புடன் நடனம் ஆடுமாம் (அது எது என வினாவினால்) சுக சொரூபியானவள், மலமற்றவள், பராசக்தி, இம ராஜன் தந்தருளிய மடந்தை, உடுக்கை போன்ற இடுப்யை உடையவள், பயமற்றவள், மலை போன்று சலனமில்லாமல் இருப்பவள், இப்பேர்ப்பட்ட பார்வதி தேவி தந்த திருக் குமாரன், ஞானமும் அறிவும் இளமையும் உடையவன், தேன் போன்ற இனிய மொழியை பகரும் மான் மகளான வள்ளிப் பிராட்டி, ஐராவதம் வளர்த்த தேவசேனை, இவர்களின் துணைவன், எனது உள்ளத்தில் என்றும் நிலைத்து இருப்பவன், எனும் ஒலியுடன், நடனமிடும் மயில் வாகனத்தில், பவனி வரும் குமரகுரு மூர்த்தியின் கொடியில் உள்ள சேவலே தான் அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவல் விருத்தம் - 10 - Seval Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - துவஜமே, கிடு, சேவற், திகுட, திருத், நடுங்கவும், உள்ள, துணைவன், மலைகள், படபடென, உயிர், பிளந்து, கண்ட