சேவல் விருத்தம் - 9
டுர்கா - கண்ட சாபு
உருவாய் எவர்க்கு நினை அரிதாய் அனைத்துலகும் உளதாய் உயிர்க் உயிரதாய் உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம ஒளியாய் அருட்பொருளதாய் வரும் ஈசனைக் களப முகன் ஆதரித் திசையை வலமாய் மதிக்க வருமுன் வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான் முன் வைகு மயிலைப் புகழுமாம் குருமா மணித்திரள் கொழிக்கும் புனற் கடக் குன்றுதோ றாடல் பழனம் குலவு பழமுதிர் சோலை ஆவினன் குடி பரங்க் குன்றிடம் திருவேரகம் திரையாழி முத்தைத் தரங்கக் கை சிந்தித் தெறித்திடும் செந்தி நகர் வாழ் திடமுடைய அடியவர் தொழு பழையவன் குலவுற்ற சேவற் திருத் துவஜமே (சேவற் திருத் துவஜமே பழையவன் சேவற் திருத் துவஜமே) |
அடியவர்களுக்கு அனுக்ரகம் செய்யும் பொருட்டும் சில திருவிளையாடல்கள் செய்யும் பொருட்டும் நடராஜ மூர்த்தி தட்சிணாமூர்த்தி முதலிய பல வடிவங்களை எடுத்தும், ஆனால் தன்னுடைய சொந்த நிலையான சொரூப நிலையில் எவராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாதவராயும், சகல உலகங்களில் வாழும் ஜீவன்களின் சொரூபமாயும், அந்தந்த உயிர்களை உள் நின்று இயக்கும் உயிர்ச் சக்தியாயும், அந்த உயிர்களின் அந்தக்கரணமான அறிவு ரூபமாயும், விரித்துச் சொல்வதற்கு அரிதான வேத மொழிகளால் ஆராய்ந்து நிச்சயிக்கப்படும், மேலான அனைத்தையும் கடந்த பிரம்மப் பொருளாய், அருட் பொரும் ஜோதியாய், நின்று விளங்கும் சிவ பெருமானை, யானை முகக் கணபதி, அன்பு பாராட்டி, முன் ஒரு காலத்தில் எட்டு திசையில் உள்ளோரும் மதிக்கும்படி அந்த ஈசனை வலம் வரும் சமயத்தில், விளங்கும் முருகனைத் தன் முதுகில் சுமந்து கொண்டு, பூமியைச் சுற்றி வந்த (அந்த முருகனின்), முன்பாக, வீற்றிருக்கும் மயிலைப் புகழ்ந்து பேசுமாம் (அது எது என வினாவினால்) ஒளி வீசுகின்ற, ரத்னக் குவியல்களை, வெள்ளத்தில் அடித்துக் கொண்டு வரும், அருவிகளும், காடுகளும் விளங்கும், பல மலைகள், பல வயல்கள், பிரகாசம் பொருந்திய சோலை மலை, திருவாவினன்குடி, திருப்பரங்குன்றிலும், சுவாமிமலை, கடல் அலைகள் முத்துக்களை, சமுத்திரம் தன் கைகளினால், வீசி எறிந்திடும், திருச்செந்தூரில் வாழும் திடமான பக்தியைக் கொண்ட அடியார்கள் போற்றி வணங்குகின்ற, பழம் பொருளாகிய முருகப் பெருமான், கையில் தரித்திருக்கும், கையில் தரித்துள்ள கொடியில் உள்ள சேவலேதான் அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேவல் விருத்தம் - 9 - Seval Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வரும், துவஜமே, அந்த, விளங்கும், சேவற், திருத், கொண்டு, நின்று, முன், வாழும், கையில், பொருட்டும், சோலை, மயிலைப், செய்யும், பழையவன்