மயில் விருத்தம் - 9 - மயில் விருத்தம்
டுர்கா - கண்ட சாபு
சிகர தமனிய மேருகிரி ரஜதகிரி நீல கிரி எனவும் ஆயிரமுக தெய்வனதி காளிந்தி என நீழலிட்டு வெண் திங்கள் சங்கெனவும் ப்ரபா நிகர் எனவும் எழுதரிய நேமியென உலகடைய நின்ற மா முகில் என்னவே நெடியமுது ககன முகடுற வீசி நிமிருமொரு நீலக் கலாப மயிலாம் அகரு மரு மணம் வீசு தணிகை அபிராம வேள் அடியவர்கள் மிடி அகலவே அடல் வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில் அலங்கற்குழாம் அசையவே மகரகன கோமள குண்டலம் பல அசைய வல்லவுணர் மனம் அசைய மால் வரை அசைய உரகபிலம் அசைய எண்டிசை அசைய வைய்யளி ஏறு மயிலே (வையாளீ ஏறு மயிலே |
பொன் நிறமான சிகரங்களை உடைய, மேரு மலை என்று சொல்லும்படியாகவும், கைலாய மலை எனும்படியாகவும், நீலோற்பல மலர்கள் வளரும் தணிகை மலை எனும்படியும் (இவ்வாறு பல நிறங்களைப் பெற்று) ஆயிரம் கிளை நதிகள் கொண்ட கங்கை, யமுனை நதி போல, ஒளி வீசும், வெண்நிலா போன்ற சங்கின் நிறத்தைப் போலவும், தேவர்களின் சிலைகளை அலங்கரிக்கும் திரு வாச்சி போலவும், எழுதுவதற்கு அரிதான வட்ட வடிவமான சக்ரம் போலவும், உலகம் முழுவதும் பரந்திருக்கும் பெரிய மேகக் கூட்டம் போலவும், நீண்ட பழமையான அண்டத்தின் உச்சி வரையிலும், தோகையை வீசி நிமிர்ந்திருக்கும், ஒப்பற்ற, நீல நிறத் தோகையைக் கொண்ட மயில் (அது யாருடையது என வினாவினால்) அகில் மருக் கொழுந்து மணம் வீசும், திருத்தணிகையில் வீற்றிருக்கும் பேரழகன், தன்னுடைய பக்தர்களின் வறுமை நீங்கும்படி, திருக் கரத்தில் வலிமை வாய்ந்த வேலாயுதம் விளங்கி நிற்கவும், பன்னிருத் திருத் தோள்களில் பலவித மலர்களில் தொடுக்கப்பட்ட மாலைகள் அசையவும், மீன் வடிவமுள்ள பொன்நிறமான, அழகிய காதில் குண்டலங்கள் அசையவும், கொடிய அரக்கர்களின் மனம் சஞ்சலப் படவும், மயக்கம் தரும் கிரவுஞ்ச கிரி நடுங்கவும், பாதாள லோகம் கிடுகிடென நடுங்கவும், எட்டுத் திக்குகளும் அசைவுறவும், பவனிக்காக சவாரிக்கு புறப்படும் மயிலே தான் அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
9 - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அசைய, போலவும், மயிலே, மனம், கொண்ட, வீசும், நடுங்கவும், அசையவும், தணிகை, வீசி, எனவும், நீலக், கலாப, மணம், மயிலாம், கிரி