மயில் விருத்தம் - 8 - மயில் விருத்தம்
மாண்ட் - கண்ட சாபு
செக்கர் அளகேச சிகரத்ன புரி ராசினிரை சிந்தப் புராரி அமிர்த்தம் திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள் தீவிஷங்க் கொப்புளிப்ப சக்ரகிரி சூழவரு மண்டலங்கள் சகல சங்கார கோர நயன தறுகண் வாசுகி பணா முடி எடுத் உதருமொரு சண்டப் பரசண்ட மயிலாம் விக்ரம கிராதகுலி புனமீத் உலாவிய விருத்தன் திருத்தணிகை வாழ் வேலாயுதன் பழ வினைத்துயர் அறுத்தெனை வெளிப்பட உணர்த்தி அருளி துக்கசுக பேதமற வாழ்வித்த கந்த சுவாமி வாகனம் ஆனதோர் துரக கஜ ரதகடக விகடதட நிருதர் குல துஷடர் நிஷடுர மயிலே (சண்ட ப்ரசண்ட மயிலாம்) |
(வாசுகியின்) வரிசையாக அமைந்துள்ள படங்களின் கூட்டம், சிவந்த நிறமுள்ள குபேரனின் செல்வத்தைப் போன்ற, விளங்குகின்ற முடியிலுள்ள நாக ரத்னங்களை, சிதற, திரிபுர சம்ஹாரியான சிவனார் முன்பு அமிர்தம் போல் உண்ட ஆலகால விஷம், மீண்டும் தோன்றி விட்டதோ என அனைவரும் அஞ்ச, பிளவு பட்ட ஆயிரம் வாய்களும், நெருப்பைப் போல் எரியும் விஷத்தைக் கக்க, சக்ரவாளகிரியால் சூழப்பட்ட தேசங்கள் யாவையும், ஒரே மூச்சில் அழிக்க வல்ல, கொடூரமான பார்வையை உடைய, வீரமும் கொடூரமும் உள்ள வாசுகியின், படக்கூட்டங்களை ஒரே அடியாகத் தூக்கி வீசுகிற, உக்ரமும் வேகமும் கொண்ட மயில் (அது யாருடையது என வினாவினால்) வீரம் மிக்க வேடர் வம்சத்தில் வளர்ந்து வந்த, வள்ளி புனத்திற்கு சென்று உலாவி வந்த, கிழ ரூபம் எடுத்த மேலோன், சானித்தியம் கொண்டு திகழும் திருத்தணி தலத்தில் வாழும் வேலாயுதக் கடவுள், என்னுடைய பூர்வ ஜென்ம வினைகள், துன்பத்தை ஒழித்து, நான் யார் என்பதை எனக்கு உபதேசம் மூலமாக உணர்த்தி அருளி, இன்ப துன்பங்களை கடந்த அத்துவித நிலையில் என்னை இருத்தி அருளிய கந்த சுவாமி, வாகனமாக திகழும், ஒப்பற்ற, குதிரை, தேர், யானை காலாட் படைகளைக் கொண்ட, பெருமை உள்ளதும் அகன்றதுமான, அசுரர்குல தீயோர்களை கொடுமையை காட்டி அழிக்கின்ற மயிலே தான் அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
8 - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போல், வாசுகியின், கொண்ட, வந்த, திகழும், மயிலே, சுவாமி, மயிலாம், உணர்த்தி, அருளி, கந்த, ஆயிரம்