மயில் விருத்தம் - 10 - மயில் விருத்தம்
மத்யமாவதி - கண்ட சாபு
நிராஜத விராஜத வரோதய பராபர நிராகுல நிராமய பிரா நிலாதெழு தலால் அறமிலா நெறி யிலா நெறி நிலாவிய உலாச இதயன் குராமலி விராவுமிழ் பராரை அமரா நிழல் குரானிழல் பராவு தணிகை குலாசல சராசரம் எலாம் இனிதுலாவிய குலாவிய கலாப மயிலாம் புராரி குமரா குருபரா எனும் வரோதய புராதன முராரி மருகன் புலோமஜை சலாமிடு பலாசன வலாரி புக லாகும் அயில் ஆயுத நெடுன் தராதல கிராதர்கள் குலாதவ அபிராம வல சாதனன் வினோத சமரன் தடாரி விகடாசுரன் குடாரித படா திகழ் ஷடானனன் நடாவு மயிலே (மயிலே, ஷடானனன் நடாவு மயிலே |
'நி' + 'ராஜத', மூன்று குணங்களில் ஒன்றான ராஜத குணம் அற்றவன், 'வி' + 'ராஜத', ராஜத குணத்திற்கு எதிரான சாத்வீக குணமுடையவன், அடியவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தருபவன், பரமேஸ்வரன், மன வருத்தம் இல்லாதவன், 'நிர்' + 'அமயம்' (நோய்), நோய் இல்லாதவன், தலைவன், தர்ம நெறி அற்றவர்களும் ஒழுக்க நெறி அற்றவர்களும் தன்னிடம் சேராததினால், நன்நெறி பூண்டு ஒழுகி மனக்களிப்புடன் எப்போதும் இருப்பவன், குரா மரங்களில் தோன்றி, கலந்து வெளிப்பட்டு விளங்கும், பருத்த அடிமரத்தின் கீழ், (திருவிடைக்கழியில்) சானித்தியத்துடன் விளங்குபவன், ஒளி வீசும், குரா மரங்களின் நிழலில், படர்ந்திருக்கும், திருத்தணிகை முதலிய சிரேஷ்டமான மலை முதல், பூவுலகெங்கும், களிப்புடன் திரிந்து, குலாவுகின்ற தோகை மயில் (அது யாருடையது என வினாவினால்) திரிபுரமெரித்த சிவ பெருமானின் மைந்தா, சிவ குருமூர்த்தியே, என்று துதித்து வணங்கும், அடியவர்களுக்கு வேண்டிய வரங்களை நல்குபவன், பழம் பெரும் கடவுளானவரும், 'முரன்' என்ற அசுரனைக் கொன்றவரும் ஆன திருமாலின் மருமகன், (பழங்களையே உண்டு வாழும்) கிளி போன்ற இந்திராணியால், வணங்கப்படுகின்றவன், இந்திரனுக்கு சரணாகதி அளித்த வேலாயுதக் கடவுள், நீண்ட பூமியின் கண் உள்ள மலைகளில் வாழும், வேடுவர்களின் குலத்திற்கு சூரியனைப் போல், மாப்பிள்ளையாகிய பேரழகன், வலிமையை சாதித்தவன், போர் புரிவதை விளையாட்டாகச் செய்பவன், மலையான கிரவுஞ்சத்தை அழித்தவன், தொந்தரவுசெய்து வந்த சூரபத்மாவை, கோடாரியைப் போல் மார்பை இரு கூறாகப் பிளந்தவன், நன்மையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் ஆறுமுகப் பெருமான், செலுத்துகின்ற மயிலே தான் அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
10 - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மயிலே, ராஜத, நெறி, நடாவு, ஷடானனன், குரா, வாழும், அற்றவர்களும், போல், அடியவர்களுக்கு, வரோதய, வேண்டிய, இல்லாதவன், நோய்