மயில் விருத்தம் - 6 - மயில் விருத்தம்
சின்துப்கைரவி - கண்ட சாபு
சங்கார காலமென அரிபிரமர் வெருவுற சகல லோகமு நடுங்க சந்த்ர சூரியர் ஒளித்து இந்த்ராதி அமரரும் சஞ்சலப் பட உமையுடன் கங்காளர் தனி நாடகம் செய்தபோத் அந்த காரம் பிறன்டிட நெடும் ககன கூடமு மேலை முகடு முடிய பசுங்க் கற்றை கலாப மயிலாம் சிங்கார குங்கும படீர ம்ருகமத யுகள சித்ரப் பயோதர கிரி தெய்வ வாரண வனிதை புனிதன் குமாரன் திருத்தணி மகீதரன் இருங்க் கெங்கா தரன் கீதம் ஆகிய சுராலய க்ருபாகரன் கார்த்திகேயன் கீர்த்திமா அசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரி கிழிபட நடாவு மயிலே (பசுங்க் கற்றை கலாப மயிலாம்) |
நான்கு யுகங்களின் முடிவில் எல்லாம் அழிவடையும் இறுதி காலம் வந்து விட்டதோ என்று, திருமாலும் பிரமனும் அச்சப்பட்டு நடுங்கவும், எல்லா உலகங்களும் அச்சப்படவும், சந்திரனும் சூரியனும் பயத்தால் ஒளிந்து கொள்ளவும் இந்தராதி அமரர்கள் குழப்பமடையவும், உமாதேவியுடன் எலும்பு மாலை அணிந்த சிவனார், ஒப்பற்ற சர்வ சங்கார நடனம் செய்த சமயம், பிரளய இருள் மூடி இருந்தது போல், விரிந்த மேல் உலகத்தின் உச்சியும், வானத்தின் உச்சியும், மறையும்படி செய்த பசிய தோகையை உடைய மயில் (அது யாருடையது என வினாவினால்) பேரழகுடைய, குங்கும நிறங் கொண்ட சாந்துக் கலவையையும், கஸ்தூரியையும் புனைந்த, இரண்டு விஸ்தாரமும் அழகும் உடைய மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட, தெய்வீகம் பொருந்திய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட தேவயானையின், மணவாளனாகிய பரிசுத்த மூர்த்தியான, குமரக் கடவுள், திருத்தணி மலையில் வாழ்பவன், பெரிய கங்கா நதியில் பொறி ரூபமாக ஏந்தப்பட்டவன், இசைக்கு ஆதாரமான ஏழு சுரங்களுக்கும் இருப்பிடம் ஆனவன், கருணைக் கடல், கிருத்திகை மாதர்களின் புதல்வன், வலிமை மிக்க சூரபத்மாதிகள் மடியவும், கிரவுஞ்ச மலை பிளவுபடவும், போர்களத்தில் குமரக் கடவுள் ஏறி வந்த மயிலே தான் அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
6 - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உச்சியும், செய்த, உடைய, கொண்ட, கடவுள், குமரக், மயிலே, திருத்தணி, கற்றை, பசுங்க், கலாப, மயிலாம், குங்கும, சங்கார