மயில் விருத்தம் - 5 - மயில் விருத்தம்
பாகேஸ்ரீ - கண்டசாபு
ஜோதியிம வேதண்ட கன்னிகையர் தந்த அபி நய துல்ய சோம வதன துங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாம சுந்தரி பயந்த நிரைசேர் ஆதினெடு முதண்ட அண்ட பகிரண்டங்கள் யாவுங்க் கொடுஞ்ஜ சிறகினால் அணையுன் தனது பேடை அண்டங்கள் என்னவே அணைக்குங்க் கலப மயிலாம் நீதிமரை ஓதண்ட முப்பத்து முக்கோடி நித்தரும் பரவு கிரியாம் நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன் நிர்வியாகுலன் சங்குவாள் மாதிகிரி கோதண்ட தண்டன் தரித்த புயன் மாதவன் முராரி திருமால் மதுகைட வாரி திரு மருகன் முருகன் குமரன் வரமுதவு வாகை மயிலே (முருகன் கலாப மயிலே |
ஒளிவடிவினளாய், இமய மலையின்கண், தோழியர்கள் பாதுகாத்து வந்த, மிகுதியான அலங்காரம் உடையவளும், பரிசுத்தம் மிகுந்தவளும், சந்தரன் போல் தண்ணொளி வீசும் முகம் உடையவளும், சிறந்த, மூன்று முனைகளை உடைய சூலாயுதத்தைக் கையில் கொண்டவளும், எலும்பு மாலையை அணிந்தவளும், சிவபெருமானையே எப்பொழுதும் நாடி விரும்பி இருக்கும் பார்வதி தேவி, படைத்த, ஒழுங்குமுறையும் வரிசை கொண்டதுமான, புராதனமானவையும் பரந்துள்ளதுமான, மிகப் பெரிய பிரபஞ்ச படைப்புகளான உலகங்கள் எல்லாமும், வெளி உலகங்கள் யாவையும், வளைந்த தனது சிறகினால், ஒரு ஆண் மயில் தனது பேடை மயிலின் முட்டைகளைக் காப்பது போல், அகில பிரபஞ்களையும் பாதுகாக்கும் மயில் (அது யாருடையது என வினாவினால்) பல தர்மங்களை உணர்த்தும் வேதங்கள், வர்ணிக்கும், வெளி உலகங்களில் வாழும், 33 கோடி தேவர்களும் துதித்து வணங்கும் மலையாகிய, திருத்தணியில் வாழும் வேலாயுதக் கடவுள், தனக்கென்று ஒரு பற்றுக் கோடும் இல்லாதவன், பயமில்லாதவன், மனத் துன்பம் இல்லாதவன், பாஞ்ச சனியம் எனும் சங்கு, நாந்தகம் எனும் வாள், பெருமை மிக்க சுதர்சனம் எனும் சக்ரம், சாரகங்கம் எனும் வில், கெளமேதகம் எனும் கதை, ஆகியவைகளை ஏந்தியுள்ள புயங்களை உடையவனும், மாதவனும் முராரியும் திருமாலும், மது கைடவன் என்ற இரு அசுரர்களை அழித்தவனாகிய திருமாலினுக்கும், மகாலட்சுமிக்கும், மருமகன், முருகவேள் குமரக் கடவுளின், வேலும் மயிலும் துணை என்கிற மகா மநிதிரத்தின் பொருளாக நின்று அதை ஜெபிக்கும் அடியார்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுக்கும் வெற்றி மயில் தான் அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
5 - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - எனும், மயிலே, மயில், தனது, வெளி, இல்லாதவன், உலகங்கள், வாழும், உடையவளும், முருகன், பேடை, வரமுதவு, வாகை, சிறகினால், போல்