மயில் விருத்தம் - 4 - மயில் விருத்தம்
மனோலயம் - ஆதி
யுககோடி முடிவின் மண்டிய சண்ட மாருதம் உதித்த தென்ற் அயன் அஞ்ஜவே ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள லோகமும் பொற் குவடுறும் வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந் இரு விசும்பிற் பறக்க விரினீர் வேலை சுவற சுரர் நடுக்கங்க் கொளச்சிறகை வீசிப் பறக்கு மயிலாம் நககோடி கொண்டவுணர் நெஞ்ஜம் பிளந்த நர கேசரி முராரி திருமால் நாரணன் கேசவன் சீதரன் தேவகீ நந்தனன் முகுந்தன் மருகன் முககோடி நதிகரன் குருகோடி அனவரதம் முகிலுலவு நீலகிரிவாழ் முருகனுமை குமரன் அறு முகன் நடவு விகடதட முரிக் கலாப மயிலே (விகடதட முரிக்கலாப மயிலே |
திரேதா யுகம், கிருதா யுகம், துவார யுகம், கலி யுகம் என்கிற சதுர் யுகங்களின், எல்லையின் முடிவு காலங்களில், உக்ரமாக வீசும், சூராவளிக் காற்று, இப்போதே வந்து விட்டதோ என்று, பிரமன் நடுக்கமுற, கோடிக்கணக்கான தேவலோகங்களும், கீழ் உலகங்களும், பொன் மயமான சிகரங்களை உடைய, கோடிக் கணக்கான மலைகளும், மயில் அடி வைக்கும் பொழுதே, பொடியாகி, பெரிய ஆகாசத்தில் தூளாக பறக்கவும், பரந்த நீர்ப் பரப்பை உடைய கடல் வற்றிப் போகவும், தேவர்கள் பயப்படவும், தன்னுடைய தோகைகளை வீசிப் பறக்கும் மயில் (அது யாருடையது என வினாவினால்) எண்ணிலடங்காத நகங்களைக் கொண்டு, அரக்கர்களின் மார்பைப் பிளந்த, நரசிங்க மூர்த்தி, முரன் எனற அசுரனைக் கொன்றவர், மேக வண்ணன், பாற்கடலில் வசிப்பவர், கேசி என்ற அசுரனை வதைத்தவர், மஹாலட்சுமியை தனது திரு மார்பில் தரித்துள்ளவர், தேவகியின் திருக் குமாரர், முக்தியையும் உலக நலங்களையும் வழங்குபவர், ஆகிய மஹா விஷ்ணுவின் மருமகனும், ஆயிரம் முகங்களை உடைய கங்கையினால் சுமக்கப்பட்ட ஜோதி வடிவினன், வெள்ளை நிறமாக பரவிச் செல்லும், மேகங்கள் எப்பொழுதும் தவழ்கின்ற, திருத்தணி மலையில் வீற்றிருக்கும், முருக மூர்த்தி, பார்வதி பாலன், ஆறுமுகக் கடவுள், செலுத்துகின்ற, அழகும், பெருமையும், மிக்க வலிமையும் கொண்ட தோகைகளை உடைய மயிலே அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
4 - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, யுகம், வீசிப், மயிலே, தோகைகளை, மூர்த்தி, மயில், விகடதட, பறக்கு, மயிலாம், பிளந்த, மலைகளும்