மயில் விருத்தம் - 11 - மயில் விருத்தம்
மத்யமாவதி
என்னாளும் ஒருசுனையில் இந்த்ர நீலப் போத் இலங்கிய திருத்தணிகை வாழ் எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏரும் ஒரு நம் பிரானான மயிலை பனாளும் அடிபரவும் அருணகிரி நாதன் பகர்ந்த அதிமதுர சித்ரப் பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும் மாசறு மயில் விருத்தம் ஒருபத்தும் படிப்பவர்கள் ஆதி மறை ஞூல் மன்னான் முகம் பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர் வாணி தழுவப் பெறுவரால் மகராலயம் பெறுவர் உவணம் ஏறப்பெறுவர் வாரிஜ மடந்தை யுடன் வாழ் அன்னயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர் அமுதா சனம் பெறுவர் மேல் ஆயிரம் பிறைதொழுவர் சீர் பெறுவர் பேர் பெறுவர் அழியா வரம் பெறுவரே. (அழியா வரம் பெறுவரே அழியா வரம் பெறுவரே) |
ஒரு நாள் கூட தவறாமல் எப்பொழுதும், ஒப்பற்ற, நீர் மடுவில், இந்திரநீலம் எனப்படும் நீலோற்பல மலர் விளங்குகின்ற, தணிகாசலத்தில் வாழும், எமது தெய்வமாகிய கந்தக் கடவுள், தேவர்களின் தலைவன், ஊர்தியாக ஏறும், ஒப்புவமை இல்லாத நாம் வழிபடும் தெய்வமான மயில் வாகனத்தை, பல நாட்களாக துதித்து வணங்கும், அருணகிரிநாதனாகிய நான், இயற்றிய, இனிமை நிறைந்ததும், விசித்ரமான அழகுகள் நிறைந்ததும், இசைக்குரிய பாடலாகச் சொன்ன, எவ்வித குற்றமும் இல்லாத, இந்த பத்து விருத்தப் பாக்களையும், தினமும் பாராயணமாக ஓதி உணர்ந்தவர்கள், மிகவும் பழமையான வேதங்கள், நிலை பெற்று விளங்கும், பிரம தேவனின் சொரூபத்தை அடைவார்கள், பிரம்மனின் அன்ன வாகனத்தில் ஏறும் பாக்யத்தைப் பெறுவார்கள், கலைவாணியாகிய சரஸ்வதி தேவியின் திருவருளைப் பெற்று அவருடன் கூடி வாழ்வார்கள், சுறா மீன்கள் வாழும் சமுத்திரத்தின் தலைவனாகிய வருண பதவியை அடைவார்கள், கருட வாகனத்தில் ஏறுவார்கள், செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியுடன் வாழும் சிறந்த தலைமைப் பதவியை பெறுவார்கள், தேவேந்திரனுடன் அயிராவதத்தின் மேல் பவனி வருவார்கள், தேவர்கள் போல் அமுதத்தை அருந்தி மகிழ்வர், அதற்கு மேலும் ஆயிரம் பிறை கண்டு சதாபிஷேகம் செய்யப் பெறுவார்கள், மிகச் சிறந்த பெருமையும் புகழும் அடைவார்கள், முடிவில் அழிவில்லாத முக்தி சாம்ராஜ்யத்தை அடைவார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
11 - மயில் விருத்தம், Mayil Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெறுவர், அடைவார்கள், வரம், பெறுவார்கள், வாழும், அழியா, பெறுவரே, ஒருபத்தும், பெற்று, வாகனத்தில், மாசறு, சிறந்த, பதவியை, நிறைந்ததும், இல்லாத, ஏறப்பெறுவர், மேல், வாழ், மயில், ஏறும், ஆயிரம்