கந்தர் அனுபூதி - அருணகிரிநாதர் நூல்கள்
ஆனா அமுதே அயில்வே லரசே ஞானா கரனே நவிலத் தகுமோ யானாகிய வென்னை விழுங்கி வெறுந் தானாய் நிலைநின் றதுதற் பரவே. |
28 |
கெடுதலும் அழிவுமில்லாத அமுதம் போன்றவனே, கூரிய வேலாயுதத்தை கையில் ஏந்திய மன்னவனே, ஞானத்திற்கு இருப்பிடமானவனே, நான் என்னும் ஆணவ முனைப்பில் அழுந்தி இருக்கும் என்னிடமிருந்து ஜீவபோதத்தை போக்கி சிவபோதத்துள் அடக்கி, வேறு ஒன்றும் இல்லாது எல்லாம் தானேயாய், நிலைத்திருப்பதான, மேலான நிலையை (அனுபவித்து அனுபவத்தில் காண்பதே அல்லாது பிறருக்கு இந்த அனுபவம் இத்தன்மையது என்று), சொல்லத் தக்கதோ? (சொல்ல முடியாது). ..
இல்லே யெனுமா யையி லிட்டனைநீ பொல்லே னறியாமை பொறுத் திலையே மல்லே புரி பன்னிரு வாகுவிலென் சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே. |
29 |
போர் புரிவதற்கு ஏற்றதான, பன்னிரு திருத் தோள்களிலும், அடியேனுடைய பாமாலைகளையே தரித்துக்கொண்டிருக்கும், ஒளிவீசும் வேலாயுதக் கடவுளே, இந்த இல்வாழ்க்கை எனும் மாயை வலையில், அடியேனை சிக்க வைத்து விட்டாய், தீயவனாகிய என்னுடைய, அறியாமையால் செய்த பிழைகளை பொறுத்தாய் இல்லையே. ..
செல்வா னுருவிற் றிகழ்வே லவனன் றொவ்வா ததென வுணர்வித் ததுதான் அவ்வா றறிவா ரறிகின் றதலால் எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே. |
30 |
செவ்வானம் நிறத்துடன் தோன்றும், ஐவேலை உடைய முருகப் பெருமான், அந்த ஒரு நாள், இந்த உபதேசத்திற்கு நிகரானது வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லும்படி, உபதேசத்தால் உணர்த்திய சுவானுபூதியை, அங்ஙனம் உபதேசித்த முறையில் தமக்குள் உள்ளுணர்வால் உணர்வதல்லாமல், அதை மற்றவர்களுக்கு எவ்வாறு வார்த்தைகளால் எடுத்துச் சொல்ல முடியும்? (முடியாது). ..
பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே வீழ்வா யென என்னை விதித்தனையே தாழ்வா னவைசெய் தனதா முளவோ வாழ்வா யினிநீ மயில்வா கனனே. |
31 |
மயிலை வாகனமாகக் கொண்ட முருகப் பெருமானே, பாழ்பட்ட இவ்வுலக வாழ்வு என்கின்ற, இந்தப் பெரிய மாயை என்கின்ற படு குழியிலே, நீ விழுவாயாக என்று, அடியோன் தலையில் எழுதி விட்டீரே, (இதற்கு காரணமான) இழிவான செய்கைகள், அடியேன் முன் செய்தவைகள் இருகின்றனவோ?, இனி தேவா£ர் வாழ்ந்து போவீராக. ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அனுபூதி - Kandhar Anuboothi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மாயை, முருகப், என்கின்ற, பன்னிரு, முடியாது, ஒன்றும், சொல்ல, வேறு