கந்தர் அனுபூதி - அருணகிரிநாதர் நூல்கள்
கலையே பதறிக் கதறிக் தலையூ டலையே படுமா றதுவாய் விடவோ கொலையே புரி வேடர்குலப் பிடிதோய் மலையே மலை கூறிடு வாகையானே. |
32 |
கொலை செய்வதையேதான் தொழிலாகக் கொண்ட, வேடர் குலத்தில் வளர்ந்த வள்ளிப் பிராட்டியாரை தழுவி மகிழ்கின்றவனே, மலை போன்றவனே, கிரவுஞ்ச மலையை இரு கூறிட்டு வெற்றி வாகை கொண்டவனே, முதன்மையான சமயவாதிகளோடு வாதம் செய்து பிணக்குதல் செய்து, சாஸ்த்ர நூல்களை மனக் கலக்கத்துடன் சத்தம் போட்டு பேசி, அப்படிப்பட்ட வாத பிரதிவாத மாயையிலே நான் மூழ்கிவிடுவேனோ? (மூழ்க்விடக் கூடாது). ..
சிந்தா குலவில் லொடுசெல் வமெனும் விந்தா டவியென்று விடப் பெறுவேன் மந்தா கினிதந்த வரோ தயனே கந்தா முருகா கருணா கரனே. |
33 |
கங்கா நதி தாங்கிக்கொண்டு வந்து கொடுத்த, தேவர்கள் வேண்டியபடி சிவ பெருமானிடத்தில் தோன்றியவரே, கந்தப் பெருமானே, முருகப் பெருமானே, கருணைக்கு இருப்பிடமானவனே, மனதில் துன்பத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும், மனைவி செல்வம் எனப்படும், விந்திய மலைக் காடுபோன்ற இத் துன்பத்தை, அடியேன் என்று விடுவேன்? ..
சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்கார லெனக்கு வரந்தருவாய் சங்க்ராம சிகா வலசண் முகனே கங்கா நதி பால க்ருபாகரனே. |
34 |
போரிடுவதில் வல்ல மயிலை வாகனமாக உடையவரே, ஆறுமுகக் கடவுளே, கருணைக்கு இருப்பிடமானவரே, அழகிய விலை மாந்தர்களின், தீய வழியில் சென்று, நான் கெட்டுப் போகாமல், அடியேனுக்கு வரம் தந்தருள்வீர். ..
விதிகாணு முடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய் மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின் துதியா விரதா சுரபூ பதியே. |
35 |
பிறைச் சந்தரனைப் போன்று, வளைந்து ஒளி பொருந்திய நெற்றியை உடைய, வள்ளி பிராட்டியைத் தவிர, வேறு ஒருவரையும் துதிக்காத செயலை ஒரு விரதமாகக் கொண்ட கந்தக் கடவுளே, விண்ணுக்கும் மண்ணுக்கும் தலைவனே, அரசனே, பிரம தேவன் படைத்த, இந்த தேகத்தை விட முடியாத அடியேன், நல்ல கதியை அடையும் பொருட்டு, தாமரை மலர்கள் போன்ற உனது திருவடிகளை அடியேனுக்கு என்று கொடுத்தருள்வீர்? ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அனுபூதி - Kandhar Anuboothi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அடியேன், கடவுளே, அடியேனுக்கு, கருணைக்கு, பெருமானே, செய்து, நான், கங்கா, கொண்ட