கந்தர் அனுபூதி - அருணகிரிநாதர் நூல்கள்
அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேண் உரிதா வுபதேச முணர்ந் தியவா விரிதாரண விக்ரம் வேளி மையோர் புரிதா ரக நாக புரந்தரனே. |
20 |
விரிந்து பரந்த உறுதியான உள்ளம் கொண்டவனே, மிகுந்த வலிமை உடையவனே, எல்லோராலும் விரும்பப்படுகின்றவனே, தேவர்கள் விரும்பும் தாரகப் மந்திரமாம் பிரணவப் பொருளே, விண்ணுலகோரைக் காத்த தேவசேனாபதியே, தேவ லோகத்தைத் தாங்குபவரே, அடைவதற்கு அரிது ஆகிய உண்மைப் பொருளைப் பெறுவதற்கு, அடியேனாகிய நான், தகுதி உடைவனாகும்படி உபதேசம் செய்து உணர்த்தி அருளிய திறம் ஆச்சரியமானது. ..
கருதா மறவா நெறிகாண எனக் கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய் வரதா முருகா மயில்வா கனனே விரதா கரசூர விபாட ணனே. |
21 |
கேட்ட வரங்களை வழங்கும் வள்ளலே, முருக வேளே, மயிலை வாகனமாகக் கொண்டவனே, அடியார்களைக் காக்கும் விரதம் கொண்டவனே, அசுர கூட்டங்களையும் சூரனையும் அழித்தவனே, நினைப்பு மறப்பு அற்ற வழியைக் கண்டு கொள்ள, அடியேனுக்கு, உன்னுடைய இரு திருவடித் தாமரைகளைத் தருவதற்கு, உன்னுடைய திரு உள்ளம் எப்போது இசையுமோ? ..
காளைக் குமரேச னெனக் கருதித் தாளைப் பணியத் தவமெய் தியவா பாளைச் சூழல் வள்ளி பதம்புணியும் வேளைச் சுரபூ |
22 |
கமுகின் பாளை போன்ற நீண்ட கூந்தலை உடைய, வள்ளிப் பிராட்டியின் பாதங்களைத் தொழுகின்ற, முருக வேளை, தேவர்களின் அரசனை, மேரு மலையன்ன பெருமை உடையவனை, காளைப் பருவம் கொண்ட குமரன், ஈசன் என தியானம் செய்து, அவனுடைய திருவடிகளை வணங்கும்படியான, தவத்தினை அடியேன் அடைந்தது ஆச்சரியமானது. ..
அடியைக் குறியா தறியா மையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ வடிவிக் ரமமேல் மகிபா குறமின் கொடியைப் புணருங் குணபூத ரனே |
23 |
கூர்மையும் வலிமையுமுடைய வேலாயுதத்தை ஏந்தி மகிமை பெற்றவனே, குறவர் குலத்து வளர்ந்த மின்னல் கொடி போன்ற வள்ளி நாயகியைச் சேர்கின்ற, குணக் குன்றமே, உனது திருவடியைத் தியானிக்காமல், அறிவின்மையினால், அடியேன் அடியோடு அழிந்து போகலாமோ., இது நீதியோ? இது நீதியோ? ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அனுபூதி - Kandhar Anuboothi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்டவனே, வள்ளி, அடியேன், முறையோ, உன்னுடைய, நீதியோ, முருக, உள்ளம், செய்து, ஆச்சரியமானது, தியவா