கந்தர் அனுபூதி - அருணகிரிநாதர் நூல்கள்
பேராசை யெனும் பிணியிற் பிணிபட் டோ ரா வினையே னுழலந் தகுமோ வீரா முதுசூர் படவே லெறியுஞ் சூரா சுரலோக துரந் தரனே. |
16 |
வீரனே, முதுமையான சூரபத்மன் கிளைகள் அழியும்படி, வேலாயுதத்தைச் செலுத்தின தீரனே, தேவ லோகத்தைக் காத்தவனே, சிந்திக்கத் தெரியாத தீவினைகளை உடைய அடியேன், பெரிய நீண்டுகொண்டே செல்லும், நோயால் கட்டப்பட்டு, சுழலுதல் தகுதி ஆகுமா? ..
யாமோதிய கல்வியு மெம் மறிவுந் தாமே பெற வேலவர் தந்தனாற் பூமேல் மயல் போ யறமெய்ப் புணர்வீர் தாமேல் நடவீர் நடவீ ரினியே. |
17 |
நாம் கற்று உணர்ந்த கல்வி அறிவும், நமக்கு இயற்கையாகவே அமைந்த உண்மை அறிவும், தாமே திரும்பப் பெற வேண்டி, வேலாயுதக் கடவுள் நமக்குக் கொடுத்ததினால், இப் பூமியில், நீங்கள் மயக்கங்களை விட்டு, தர்மத்தையும் ஒழுக்கத்தையும் கடைபிடித்து வாழும் உத்தம சீலர்களே, நம்மை அவனுக்கு அர்ப்பணித்து அவனுடைய புகழைச் சொல்லிச் சொல்லிப் பாடுங்கள். ..
உதியா மரியா வுணரா மறவா விதிமா லறியா விமலன் புதல்வா அதிகா வநகா வபயா வமரா பதிகா வலசூர் பயங் கரனே. |
18 |
பிறப்பில்லாதவனும், இறப்பில்லாதவனும், நினைப்பில்லாதவனும், மறதி இல்லாதவனும், பிரம்மனும் திருமாலும் தேடி காண முடியாதவனும், மலம் இல்லாவனுமாகிய சிவ பெருமானின், குமாரனே, எல்லாவற்றிற்கும் மேலானவனே, பாப இல்லாதவனே, பாபம் இல்லாதவனே, தேவ லோக ரட்சகனே, ராட்சசர்களுக்கு பயங்கரமானவனே. ..
வடிவுந் தனமும் மனமுங் குணமுங் குடியுங் குலமுங் குடிபோ கியவா அடியந் தமிலா அயில்வே லரசே மிடி யென்றொரு பாவி வௌiப் படினே. |
19 |
முதலும் முடிவும் இல்லாத, கூரிய வேலாயுதத்தை கையில் ஏந்திய அரசனே, வறுமை என்கிற ஒரு பாவி வந்து விட்டால், உடல் அழகும், செல்வங்களும், நல்ல மனமும், நல்ல குணநலங்களும், பிறந்த வம்ச பரம்பரையின் பெருமையும், பிறந்த குலத்தின் பெருமையும், நீங்கி விடுகின்றன. (இது பெரும் வியப்பே). ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அனுபூதி - Kandhar Anuboothi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பிறந்த, பெருமையும், நல்ல, பாவி, அறிவும், இல்லாதவனே, தாமே