கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
சிந்தா குலவ ரிசைப்பேரு முருநஞ் சீருமென்றோர் சிந்தா குலவ ரிடத்தணு காதரு டீமதலை சிந்தா குலவரி மாயூர வீர செகமளப்பச் சிந்தா குலவரி மருக சூரனைச் செற்றவனே. |
21 |
ஒருகாலும் அழியாது, நம்முடைய வம்ச பரம்பரையின் பெயரும், நாம் வசிக்கும் இந்த நகரமும், நமது சிறப்பும், என்று பொய்யாக எண்ணுகின்ற, அஞ்ஞானிகள் பால், நான் சேராதிருக்க நீ அருள வேண்டும், அக்னி தான் உருவெடுத்த சேவலை, கொடியாக வைத்து, விளங்கும், பச்சை நிறமுள்ள, மயிலேறிய சேவகனே, இவ்வுலகத்தை அளப்பதற்காக, வாமன அவதாரம் எடுத்த, திருமாலின் மருகனே, சூரபத்மனை வென்றவனே. ..
செற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற் செற்றை வரும்பழ நிக்கந்த தேற்றிடு நூற்றுவரைச் செற்றை வரும்பழ நாடாள நாடிகண் சேய்விடுத்த செற்றை வரும்பழ மாங்கூடு வேமத் தினத்தில்வந்தே. |
22 |
செற்றை எனும் மீன் இனம், திகழ்கின்ற, வயல்கள், பூஞ்சோலை, மதில்கள் (இவை), திகழ்கின்ற, மலையின் மேல், மேகக் கூட்டம், தவழ்கின்ற, பழநி மலை ஆண்டவனே, எனக்கு அபயம் கொடுத்து காப்பாற்று, துரியோதனாதிகள் நூறு பேரையும் அழித்து, பஞ்ச பாண்டவர்கள் ஐவரும், புராதனமான ராஜ்ஜியத்தை ஆளும்படி, மனதில் நினைத்து (அப்படிச் செய்த கிருஷ்ணமூர்த்தியின்), ஒரு நேத்திரமாகிய சூரியனின், மைந்தனாகிய எமன், அனுப்பிய, தூதர் கூட்டம், வருகின்ற, கிழ திசை அடைந்த இந்த உடலாகிய கூடு, அக்னியில் தகிக்கப் படுகின்ற, அந்த கடைசி நாளில், எழுந்தருளி, எனக்கு அபயம் கொடுத்து காப்பாற்று). ..
தினகர ரக்கர தங்கெடுத் தார்குரு தேசிகர்செந் தினகர ரக்கர மாறுடை யார்தெய்வ வாரணத்தந் தினகர ரக்கர சத்தி யின் றாகிலத் தேவர்நண்ப தினகர ரக்கர தந்தீர்வ ரீர்வர் செகமெங்குமே. |
23 |
பகன் பூடா என்னும் இரண்டு சூரியர்களுடைய, நேத்திரத்தையும், பல்லையும், அழித்த சிவபெருமானுக்கு, உபதேசம் செய்த ஞானாசிரியனும், செந்தில் பதியில் இருப்பவரும், ஷடாக்ஷரப் பொருளாய் இருப்பவரும், தெய்வீகமான, வேதங்கள் பூஜித்த, சர்ப்பம் போல் வடிவமுடைய திருச்செங்கோடு மலையை ஆள்பவரும் ஆகிய கந்த பிரானின், அரத்தைப் போன்ற கூர்மையான, கை வேலாயுதம், இல்லை என்றால், தேவர்களின் சிறந்த அமராவதி நகரம், இல்லாமல் போயிருக்கும், வஞ்சனையை உடைய அசுரர்கள், இறப்பைத் தவிர்த்திருப்பார்கள், உலகம் முழுவதையும் நிர்மூலமாக்கி இருப்பார்கள். ..
செகம்புர வார்கிளை யெல்லா மருண்டு திரண்டுகொண்ட செகம்புர வாதிங்ஙன் செய்ததென் னோமயல் செய்யவன்பு செகம்புர வாச மெனத்துயில் வார்செப்ப பங்கபங்க செகம்புர வாமுரல் செந்தூர வென்னத் தெளிதருமே. |
24 |
இவ்வுலகத்திலும், ஊரிலும் உள்ள, ஒழுங்கான, உறவினர் எல்லாரும், பயந்து கொண்டு, கூட்டமாக கூடிக்கொண்டு, ஆட்டினுடைய, தலையை, காப்பாற்றாது, இந்த இடத்தில், வெறியாட நினைத்து அதைக் கொல்லக் கருதுவது என்ன விபா£தம்? (அதற்கு பதிலாக) ஒருதலை காமமாக மயங்கி இருக்கும் இந்தப் பெண்களின் விரக தாபம், சிவந்த, வலிய, ஆதி சேடனை, சொந்த வாசஸ்தலமாக, நித்திரை செய்யும் மகாவிஷ்ணு, புகழ்கின்ற, குற்றமில்லாதவனே, தாமரை வாவியில், சங்குகள், உரக்கமாக சப்தம் செய்கின்ற, செந்தில் பதியானே, என்று அவன் நாமத்தைச் சொன்னால், அந்தக் கணத்திலேயே மயக்கம் தீர்ந்து விடும். ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - செற்றை, தினகர, சிந்தா, ரக்கர, வரும்பழ, செகம்புர, செய்த, இருப்பவரும், நினைத்து, செந்தில், அபயம், குலவரி, குலவ, திகழ்கின்ற, கூட்டம், கொடுத்து, எனக்கு, காப்பாற்று