கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
சேரிக் குவடு மொழிவிழி யாடனச் செவ்விகுறச் சேரிக் குவடு விளைந்ததன் றேநன்று தெண்டிரைநீர் சேரிக் குவடு கடைநாளி லுஞ்சிதை வற்றசெவ்வேள் சேரிக் குவடு புடைசூழ் புனத்திற் றினைவிளைவே. |
17 |
இசைந்த, கரும்பையும், மாவடுவையும் (ஒத்த), பேச்சையும், கண்களையும் உடைய (வள்ளி நாயாகியின்), மார்பின் பக்குவ நிலையால், குறவர் குடிலுக்கு, அவளைக் களவு மணம் செய்து கொண்டான் முருகன் என்ற அபவாதம் ஏற்பட்டது, அந்தக் காலத்தில் தானே, நன்றாக விளங்கியது, தெள்ளிய அலைகளை உடைய சமுத்திர ஜலம், ஒன்று சேர்ந்து, பூமியை, அழிக்கின்ற, பிரளய காலத்திலும், அழிவில்லாத, முருகவேளுடைய, வடசேரி தென்சேரியில், மாலையில், பக்கவாக்கில், வயலில், தினைப்பயிரின் விளைவானது ..
தினைவேத் தியன்புசெய் வேந்தன் பதாம்புயத் திற்பத்திபுந் தினைவேத் தியமுகந் தேற்றினர் மாற்றினர் பாற்றினந்தீத் தினைவேத் தியர்நெறி செல்லாத விந்தியத் தித்தியினத் தினைவேத் தியங்குயிர் கூற்றாரி லூசிடுஞ் சீயுடம்பே. |
18 |
தினைப்புனத்திற்கு இறைவியாகிய வள்ளி, காதல் புரிகின்ற, முருகக் கடவுளின், திருவடித் தாமரையில், பத்தி செய்கின்ற உள்ளத்தையும், புத்தியையும், அவருக்கு உரிய நைவேத்தியமாக, விருப்பமுடன் சமர்பித்த அடியார்கள், உண்மையாகவே மாற்றி விட்டார்கள், பருந்துக் கூட்டங்களும், அக்னியும், சாப்பிடுவதும், அழகிய அறிஞர்களால் உணர்த்தப்பட்ட, மார்க்கத்தில் ஒழுகாததும், பஞ்சேந்திரியங்களின் வசப்பட்டதும், தின் பண்ட வகைகளின், கழிவாகிய மலஜலமாதிகளை, ஏற்றுக்கொண்டிருப்பதும், உள் நின்று இயங்குகின்ற பிராணனை, எமன் உண்டுவிட்டால், க்ஷண நேரத்தில் ஊசிப்போகும், அருவெருக்கத்தக்க இந்த உடம்பை, மாற்றி விட்டனர்). ..
சீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவிதரத்தோல் சீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன் சீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார் சீயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே. |
19 |
பார்வதியின் பாகராகிய சிவபெருமான், நமக்கு, உபதேசம் செய்வாய் என்று கேட்டு, பணிவுடன் வாயை மூடிக்கொண்டு, காதால் கேட்க, யானைகளும், சிங்கங்களும், தஞ்சமாக உறைகின்றதும், கல்வி ஒழுக்கத்திற்கு இருப்பிடமாகிய, பொதிக மலைக்கு, தலைவனாகிய, அகத்திய முனிவனின், பாட்டனாரும், பாற்கடலை கடைந்தவனாகிய திருமாலின், மருகனாகிய குமரக் கடவுள், அப்போது உபதேசம் செய்ய, தியக்கமுற்றிருந்தார், மிகவும் கேவலமானது, அன்னத்திலும் தாமரையிலும் இருக்கும், பிரம்மன், பழமையான வேதத்தை, எதற்காக கற்றுக் கொண்டான்? ..
செயதுங்க பத்திரி போற்றும் பகீர திகரசெவ்வேற் செயதுங்க பத்திரி சூடுங் குறத்தி திறத்ததண்டஞ் செயதுங்க பத்திரி புத்திரி பாதத்தர் செல்வதென்பாற் செயதுங்க பத்திரி யத்திரி யாதிரென் சிந்தையிலே. |
20 |
கீர்த்தி உடைய, துங்கபாத்திரி நதி, வணங்குகின்ற, கங்கையின், கையில் விளங்குபவனே, சிவந்த வேலாயுதத்தை உடைய வெற்றி வீரனே, சுரபுன்னை இலையை, தரித்திருக்கும், வள்ளியின் மணாளனே, தண்டாயுதமும், உயர்ச்சியும், ஒழுக்கமும் உடைய, (மார்கண்டேயரை அழிக்கப் போனதால் எதிரியாகிய) எமனை, அழியும்படி, கால்களால் உதைத்த சிவ பிரானின், மைந்தனே, தெற்கிலிருக்கும் எமபுரத்திற்கு அழைத்துப் போவதும் யாவராலும் ஒதுக்கப்பட்டதும், ஆபத்துககள் நிறைந்ததுமாகிய வழியில், எனது மனம் முரிந்து, உழலாமல், நீ இருக்க வேண்டும், என் உள்ளத்தில் ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, போதி, செயதுங்க, சீயனம், பத்திரி, தினைவேத், குவடு, சேரிக், வள்ளி, கொண்டான், மாற்றி, உபதேசம்