கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
தேங்கா வனமும் மதகரி வேந்துடன் சேர்ந்தவிண்ணோர் தேங்கா வனமுனை யவ்வேற் பணியெனுஞ் சேயிடமேல் தேங்கா வனமுந் தளர்நடை யாயஞ்சல் செண்பகப்பூந் தேங்கா வனமுங் கழுநீ ரிலஞ்சியுஞ் செந்திலுமே. |
13 |
நிறைந்திருக்கும், பசுக் கூட்டங்களை மேய்க்கும் திருமாலையும், மும்மதங்களையும் பொழியும் ஐராவதத்திற்கு தலைவனான, இந்திரனையும், அவருடன் சேர்ந்திருக்கும், தேவர்களையும், அவர்களுக்கு இருப்பிடமான அமராவதியையும், ரட்சிப்பது, நம்முடைய, கூரிய வேலாயுதத்தின், தொழிலாகும், என்று சொல்லி (அதைக் கட்டளை இட்ட) முருகனின், வாசஸ்தலம், இதோ இருக்கிறது, திகைத்து, தன் நடையை தோற்கடிக்கிறது என்று அன்னப் பட்சியும், தளர்ந்து போகும், நடையை உடையவளே, பயப்படாதே (அவை யாவன), செண்பக மலரால், விளங்கும், இனிய, பூஞ்சோலையும், செங்கழுநீர் தடாகமும், திருச்செந்தூர் தலமுமேயாகும். ..
செந்தி லகத்தலர் வாணுதல் வேடிச் சிமுகபங்க செந்தி லகத்தலர் துண்டமென் னாநின்ற சேயசங்க செந்தி லகத்தலர் ராசிதந் தானைச் சிறையிட்டவேற் செந்தி லகத்தலர் தூற்றிடுங் கேடு திவாகருளே. |
14 |
சிவந்த குங்கும பொட்டு இட்டு, விளங்கும், ஒளி வீசும் நெற்றியை உடைய வள்ளி நாயகியின், வதனம், தாமரை போன்றது, எள்ளின் பூ போன்றது, நாசி, என்று அவளின் அழகை நலம் புனைந்து உரைத்த, குமரக் கடவுளே, ஜீவராசி கூட்டங்கள் வசிப்பதற்கு, அண்ட கோடிகளை, சிருஷ்டித்த பிரமனை, சிறையில் அடைத்த, வேலாயுதத்தை உடைய, செந்தில் ஆண்டவனே, அகங்காரத்தினால், என்னை வசைகள் பேசுவார்கள், சுற்றத்தார்கள் (அதனால்), எல்லோராலும் துதிக்கப்படும், உன் புயத்தை, எனக்கு தந்தருள வேண்டும் ..
திவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர் திவாகர கன்ன புரக்குழை வல்லி செருக்குரவந் திவாகர கன்ன சுகவா சகதிறல் வேல்கொடென்புந் திவாகர கன்ன மறலி யிடாதுயிர்ச் சேவலுக்கே. |
15 |
பகல் பொழுதில் தானம் கொடுக்கும், கையை உடையை கர்ணனே, பாரியைப் போன்ற கொடை வள்ளலே, என்றெல்லாம் பலரிடமும் பேசி, என்னை உழல வைக்கும், வறுமையாகிய, இருளை, பிளக்கக்கூடிய, ஞான சூரியனே, கர்ணபூரம் என்ற ஆபரணத்தைத் தரித்திருக்கும், வள்ளி நாயகி, பெருமிதத்துடன் (தழுவும்), மார்பை உடையவனே, மாலைப் பொழுதின் நிறத்தை உடைய, சிவபெருமானின், காதில், இனிமையாக பிரணவத்தை உபதேசம் செய்தவனே, வலிய வேலாயுதத்தை ஏந்தி வந்து, என்னுடைய இருதயத்தில் நீ வீற்றருள வேண்டும், ஒளிந்து, எமன் கொள்ளை கொள்ளாதபடி, உயிரைக் காப்பாற்றுவதற்காக ..
சேவற் கொடியும் பனிசாந் தகனுந் திருக்கரத்துச் சேவற் கொடியுங் கொடியகண் டாய்தினை சூழ்புனத்துச் சேவற் கொடியுந் திவளத் தவளுந்தந் திக்களபச் சேவற் கொடியு முடையாய் பிரியினுஞ் சேரினுமே. |
16 |
ரிஷப வாகனத்தை உடைய பரமசிவானல், பல் தகர்க்கப்பட்ட, (நிசி + அந்தகன்) பூஷா என்னும் சூரியனும், உன் திருக்கையில் ஏந்தி இருக்கும், கொடியாகிய சேவலும், பொல்லாதவைகளாய் இருக்கின்றன, தினைப் பயிர் நன்றாக வளர்ந்துள்ள கொல்லையை, காவல் புரியும், நீண்ட, காட்டாற்றின் வளப்பத்தை அநுபவிப்பவளுமாகிய (வள்ளியையும்), ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, சந்தன சேறு பூசியிருக்கும், சிவந்த, சொக்கட்டான் கருவி போன்ற மார்பகமும், கொடி போன்ற இடையையும் உடைய (தேவசேனையையும்), இரண்டு பக்கங்களிலும் சேர்த்துக்கொண்டு இருப்பவனே, உன்னைப் பிரிந்திருக்கும் போதும், உன்னிடம் கலந்திருக்கும் போதும், கொடியவைகளாய் இருக்கின்றன). ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, தேங்கா, திவாகர, கன்ன, சேவற், செந்தி, லகத்தலர், இருக்கின்றன, போதும், ஏந்தி, வேண்டும், போன்றது, விளங்கும், நடையை, சிவந்த, வள்ளி, வேலாயுதத்தை, என்னை