கந்தர் அந்தாதி - அருணகிரிநாதர் நூல்கள்
சிலைமத னம்படு மாறெழுஞ் சேய்மயி லுச்சிட்டவெச் சிலைமத னம்படு சிந்துவை யிந்துவைச் செய்வதென்யான் சிலைமத னம்படு காட்டுவர் கேளிருஞ் செங்கழுநீர்ச் சிலைமத னம்படு தாமரை வாவி திரள்சங்கமே. |
9 |
நீலோற்பலகிரியாகிய திருத்தணி மலையில் காணப்படும், தேனும், அன்னப் பட்சிகளும் நிறைந்திருக்கும், தாமரைத் தடாகத்தில் வசிக்கும், சங்கினங்களே, வில்லை உடைய மன்மதனின், பாணம், என்னைக் கொல்வது போல் தாக்குகிறது, குமாரக் கடவுளின் மயில் வாகனத்தின், எச்சிலாகிய சரப்பத்தின், எச்சிலாகிய தென்றல் காற்றையும், ஒருமுறை கடையப்பட்ட கடலையும், நிலவையும், நான் என்ன செய்து கடப்பேன்? ஆர்பாட்டத்துடன் கோபத்தை, சுற்றத்தார் எல்லோரும், என்மேல் காட்டுகிறார்கள். ..
திரளக் கரக்கரை வென்கண்ட வேலன் றிசைமுகன்மால் திரளக் கரக்கரை யான்பாட நாடுதல் செய்யசங்க திரளக் கரக்கரை காண்பான்கைந் நீத்திசை வார்பனிக்க திரளக் கரக்கரை வானீட்டு மைந்தர்புந் திக்கொக்குமே. |
10 |
ஸ்திரமான, லட்சக் கணக்கான, அசுரர்களை, வெற்றி கொண்ட, வேலாயுதனை, பிரம்மாவுக்கும், திருமாலுக்கும், ஆயிரம் கண்ணுடைய இந்திரனுக்கும், ருத்ராட்சம் அணிந்துள்ள பரமசிவனுக்கும், இறைவனாகிய கந்தக் கடவுளை, நான் புகழ்ந்து பாட உத்தேசிப்பது, சிவந்த சங்குகள் முழங்குகின்ற, கடலை, கடந்து செல்பவன், நீந்திப் போகும் புத்திக்கும், சந்திரனை, பிடிக்கும் பொருட்டு, கையளவை, ஆகாசத்தில் நீட்டும், சிறு பிள்ளையின், புத்தியைப் போலும் இருக்கிறது. ..
திக்கத்திக் கோடு படிபுடைச் சூதத் தெறிபடபத் திக்கத்திக் கோடு கடடக் கடறடி சேப்படைச்சத் திக்கத்திக் கோடு துறைத்திறத் தற்ற குறக்குறச்சத் திக்கத்திக் கோடு பறித்துக்கொ டாதி சிறைபிறப்பே. |
11 |
நாலு திசைகளிலும், எல்லோரும் திகைக்கும்படி பரந்து இருக்கும், பூமியின் கண், நீக்கி அருள்வாயாக, மாமரமாய் நின்ற சூரபத்மனை, விளங்கும்படி, ஆயிரம் பணா மகுடங்களை உடைய ஆதிசேஷனின் தலையின் மேல், இந்த சங்குகள் எல்லாம், ஊறும்படி, பெரிய விசாலமான, சமுத்திரத்தின் கண், அடக்கி அழித்த, சிவந்த வேலாயுதப் படையை உடையவனே, கதறி, மாறுபட்ட, பர சமய கோட்பாடுகளில், நீங்கி நிற்பவனே, (உலையில்) குற்றுவதற்கு, குற நாயகியாகிய வள்ளி நாயகிக்கு, யானையின் தந்தத்தை, பறித்துக் கொடுத்த, ஆதி மூலமே, பஞ்சேந்திரியங்களால் கட்டுண்ட சிறை போன்ற என்னுடைய ஜனனத்தை, நீக்கி அருள்வாய்). ..
சிறைவர வாமையி லேறிச் சிகரி தகரவந்து சிறைவர வாமையில் கூப்பிடத் தானவர் சேனைகொண்ட சிறைவர வாமையில் வாங்கிதன் றேங்கழல் யாங்கழலாச் சிறைவர வாமையி னெஞ்சுட னேநின்று தேங்குவதே. |
12 |
தோகையும், அடியார்களுக்கு அருளும் வரப்பிரசாதத்தையும் உடைய, தாவிச் செல்லும் மயிலில் ஏறி, க்ரவுஞ்ச கிரி, தூளாகும்படி எழுந்தருளி, கரையால், சூழப்பட்டதும், ஆமைகளுக்கு இருப்பிடமானதும் ஆன கடல், ஓ என்று ஓலமிட, அரக்கர்களின் சேனையால், தள்ளப்பட்ட, தேவர்களின் சிறை வாசம் நீங்க, தகுந்த, ஐவேலை, பிரயோகித்த முருகப்பெருமானின், இனிய திருவடிகளை, நான் அணுகாமல் பிரிந்திருப்பதினால், அல்பமாகிய, பஞ்சேந்திரியங்களின், ஆசையாகிய, இருளில், என்னுடைய இருதயம், சேர்ந்து நின்று (இருளொடு), திகைக்கின்றது. ..
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அந்தாதி - Kandhar Andhadhi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சிறைவர, சிலைமத, திக்கத்திக், கோடு, கரக்கரை, திரளக், னம்படு, உடைய, நான், என்னுடைய, வாமையில், வாமையி, சிறை, சிவந்த, எச்சிலாகிய, எல்லோரும், ஆயிரம், சங்குகள், நீக்கி