கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே வைவைத்த வேற்படை வானவ னே மறவேனுனைநான் ஐவர்க் கிடம்பெறக் காலிரண்டோ ட்டி யதிலிரண்டு கைவைத்த வீடு குலையுமுன் னே வந்து காத்தருளே. |
23 |
தெய்வீகம் பொருந்தியதும் அழகானதுமான மலையாகிய திருச்செங்கோட்டில் வதியும் செழுமையைத் தரும் சோதியே! கூர்மையான வேலை ஆயுதமாகக் கொண்ட தெய்வமே! உனை அடியேன் மறவேன். ஐம்புலன்களுக்கு இடமாகும்படி இரண்டு கால்களை நிறுத்தி அங்கு இரண்டு கைகளை அமைத்துள்ள இல்லம் போன்ற இந்த உடம்பு அழிவதற்கு முன்னரே தேவரீர் அடியேனுக்கு முன் தோன்றிக் காப்பாற்றியருள்வீராக!.
கின்னங் குறித்தடி னேfசெவி நீயன்று கேட்கச்சொன்ன குன்னங் குறிச்சி வௌiயாக்கி விட்டது கோடுகுழல் சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே. |
24 |
அடியேனின் துன்பத்தைத் தேவரீர் நீக்கும் பொருட்டு அடியேனின் காதில் கேட்குமாறு அந்த நாளில் உபதேசித்து அருளிய இரகசியம் மெய்ஞ்ஞான மலை மீதுள்ள திருஅருளூரில் அடியேனைச் சுத்த ஞானவெளியாக்கித் தன்வயமாக்கிக் கொண்டது. முற்காலத்தில் ஊதுகொம்பு, புல்லாங்குழல், உடுக்கை போன்ற திருச்சின்னங்கள் ஒலிக்க குறிஞ்சி நிலத்துக்கு உரியவர்களாகிய வேடர்களின் "குறிச்சி" எனப்படும் ஊருக்குச் சென்று அவர்தம் திருப்புதல்வியாகிய வள்ளியம்மையாரைத் திருமணம் செய்துகொள்ள முயன்றவரே.
தண்டாயுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத் திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலவனுக்குத் தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டாய டாவந்த காவந்து பார்சற்றென் கைக் கெட்டவே. |
25 |
அந்தகா! (இயமனே) உன்னுடைய கதாயுதமும் முத்தலைச் சூலமும் உன் கையிலிருந்து பொடிபட்டுச் சிந்த உன்னை மோதி வலியழிந்து வருந்துமாறு துண்டித்து உன்னை வீழ்த்துவேன். திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள வேற்படையுடைய திருமுருகப்பெருமானுக்கு அடிமையாகிய அடியேனுடைய விரோதமில்லாத ஞானமாகிய ஒளிபொருந்தியதும் கூர்மையானதுமாகிய வாளாயுதத்தைப் பார்த்தாயடா? எனது கைக்கு எட்டுகின்ற அளவில் சிறிது நீ வந்து பாராய்!
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங் கோலக் குறத்தி யுடன்வரு வான் குருநாதன் சொன்ன சீலத்தை மௌfளத் தௌiந்தறி வார் சிவயோகிகளே காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங்களே. |
26 |
நீல நிற மயில் வாகனத்தின் மீது ஏறுகின்ற திருமுருகப்பெருமான் எந்த நேரத்திலும் அழகு மிக்க வள்ளியம்மையாருடன் அருள் புரிவதற்கு வருவார். மேலும் அடியேனின் குருமூர்த்தியாகிய எம்பெருமான் உபதேசித்த மெய்ப்பொருளின் தன்மையை மெல்ல தேர்ந்து தெளிந்து புரிந்து கொள்பவர்களாகிய சிவயோகிகள் மாத்திரமே காலதத்துவத்தை வென்று அதனைக் கடந்து காலாதீதராக இருப்பார்கள். வெறும் கர்மயோகிகளோ காலத்துக்கு உட்பட்டு மாய்ந்துபோவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அடியேனின், உன்னை, குறிச்சி, தேவரீர், இரண்டு, வந்து