கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு வருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப் பொருமா வினைச் செற்ற போர்வேல னைக்கன்னிப் பூகமுடன் தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே. |
91 |
கரிய திருமாலுக்கு திருமருகனாகவும் செம்மையான மான் போன்ற வள்ளியம்மையை களவு ஒழுக்கத்தால் திருமணம் புரிந்து கொண்டு வந்த வேட மூர்த்தியாகவும், சேவற்கொடியைத் திருக்கரத்தில் உடையவராகவும், விண்ணுலகத்தோர் பிழைக்குமாறு மாமரமாக உருவெடுத்து நின்ற சூரபன்மனை எதிர்த்து போரிட்டுச் சிதைத்தப் போரில் வல்ல வேலாயுதத்தையுடைய வீர மூர்த்தியாகவும் விளங்குவதோடு, இளமையான பாக்கு மரங்களும் மாமரங்களும் செழித்து வளர்ந்துள்ள திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியுள்ளவருமான திருச்செங்கோடனை திருமுருகப் பெருமானை வாயார வாழ்த்துதல் மிகவும் நல்லது.
தொண்டர்கண் டண்டிமொண் டுண்டுருக் குஞ்சுத்த ஞானமெனுந் தண்டயம் புண்டரி கந்தருவாய் சண்ட தண்ட வெஞ்சூர் மண்டலங் கொண்டுபண் டண்லரண் டங்கொண்டு மண்டிமிண்டக் கண்டுருண் டண்டர்விண் டோ டாமல் வேல்தொட்ட காவலனே. |
92 |
தேவரீரின் தொண்டர்கள் தம் ஞானக் கண்ணால் பார்த்து, முகந்து, பருகி இன்புற்று இருக்கின்ற தேனையொத்த மெய்ஞ்ஞானத்தைத் தரவல்லதாகிய தண்டை அணிந்த அழகிய தாமரை மலர் போன்ற தேவரீரின் திருவடிகளை அடியேனுக்கும் தந்தருள்வீராக! வேகத்தையுடையவனும் தண்டாயுதத்தைக் கொண்டவனுமாகிய வெய்ய சூரபன்மன் முற்காலத்தில் மண்ணுலகையும் தேவருலகையும் கைப்பற்றி நெருங்கியதைப் பார்த்த தேவர்கள் அச்சத்தினால் கீழே விழுந்து உருண்டு தமது உலகை விட்டு ஓடாதபடி வேலாயுதத்தை விடுத்து அருளிய இரட்சக மூர்த்தியே!.
மண்கம ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத் திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற் கிண்கிணி யோசை பதினா லுலகமுங் கேட்டதுவே. |
93 |
மண்ணின் மணம் கமழ்கின்ற உந்தியை உடையவராகிய திருமாலின் வலம்புரிச் சங்கின் ஒலியானது அந்த விண்ணுலகில் நறுமணம் வீசும் பூங்காவிலும் தடாகத்திலும் கேட்டது. வேலாயுதத்தைத் திருக்கரத்தில் ஏந்தி திட்பமான மலைகள் பொடியாகி உதிருமாறு விளையாடுகின்ற பிள்ளையாகிய குமாரக் கடவுளின் அழகிய இடையில் விளங்கும் கிண் கிணியின் நாதமானது பதினான்கு உலகங்களிலும் கேட்டது.
தௌfளிய ஏனவிற் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன் தாள் வேட்டிலை சிறு வள்ளைதள்ளித் துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதக் சொல்லைநல்ல வௌfளிய நித்தில வித்தார Yமூரலை வேட்டநெஞ்சே. |
94 |
ஓ, மனமே! தெளிவான தினைப் புனத்தில் உள்ள கிளியை ஒத்தவரும் உள்ளத்தைக் கவரும் இளங்குமரியுமான வள்ளியம்மையை விரும்பிய திருமுருகப்பெருமானின் திருவடிகளை நீ விரும்பவில்லை; ஆயினும் சிறிய வள்ளைக்கொடியைத் தள்ளி விட்டு ஆற்றில் துள்ளித் திரிகின்ற கெண்டை மீன் போன்ற பெண்களின் கண்களையும், கோவைக் கனியொத்த சிவந்த இதழ்களையும், மயக்கும் வஞ்சக வார்த்தையையும், வெண்மையான முத்துப் போன்ற ஒளிவீசும் பற்களுடன் கூடிய புன்சிரிப்பையும் விரும்புகின்றாயே, மனமே!.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கேட்டது, விட்டு, மனமே, திருவடிகளை, அழகிய, மூர்த்தியாகவும், திருக்கரத்தில், தேவரீரின், வள்ளியம்மையை