கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்
உதித்தாங் குழல்வதுஞ் சாவதுந் தீர்த்தெனை யுன்னிலொன்றா விதித்தாண் டருள்தருங் காலமுண் டோ வெற்பு நட்டுரக பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல மதித்தான் திருமரு காமயி லேறிய மாணிக்கமே. |
39 |
பிறந்து, பிறந்த இடங்களில் உழல்வதையும் இறப்பதையும் நீக்கி அடியேனைத் தேவரீரிடத்தில் இரண்டறக் கலக்குமாறு நியமித்து ஆட்கொண்டு அருள்புரியும் ஒருகாலமும் உண்டோ? மந்தரமலையை பாற்கடலில் மத்தாக நட்டு பாம்புகளுக்கு அரசாகிய வாசுகி என்னும் வடக் கயிற்றால் வளைத்து நின்று பம்பரம் போல் சுழலுமாறு பாற்கடலைக் கடைந்தவராகிய திருமாலின் திருமருகரே, மயில் வாகனத்தில் எழுந்தருளிய மாணிக்கமே!.
சேல்பட் டழிந்தது செந்துaர் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன் கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே. |
40 |
சேல் என்னும் மீன்கள் குதித்துத் திரிவதனால் திருச்செந்தூரில் உள்ள வயல்கள் அழிந்து போயின; மலர்க்கொடி போன்ற பெண்களின் மனமானது சோலையிலுள்ள இனிமையான கடப்ப மலர் மாலையை விரும்பியதால் அழிந்து போயிற்று. பெருமை தங்கிய மயில் வாகனத்தையுடைய திருமுருகப்பெருமானது வேலாயுதம் பட்டதால் கடலும் சூரபன்மனும் கிரௌஞ்ச மலையும் அழிந்து போயின. இவ்வுலகில் கந்தவேளின் திருவடிகள் அடியேனின் தலை மீது பட்டதால் பிரம்ம தேவனால் எழுதப்பட்டிருந்த "விதி" என்னும் கையெழுத்தும் அழிந்து போயிற்று.
பாலே யனைய மொழியார்த மின்பத்தைப் பற்றியென்றும் மாலே கொண்டுய்யும் வகையறி யேன் மலர்த்தாள் தருவாய் காலே மிகவுண்டு காலே யிலாத கணபணத்தின் மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ்வேலவனே. |
41 |
பாலைப் போன்ற இனிமையான மொழி பேசும் பெண்கள் தரும் சுகத்தை விரும்பி எப்பொழுதும் மயக்கம் கொண்டவனாகி அதை விட்டுப் பிழைத்துப் போகும் வழியை அறிந்திலேன். ஆதலால் தேவரீரின் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளைத் தந்தருள்வீராக, காற்றையே மிகுதியாக உண்டு கால்களே இல்லாத கூட்டமாகிய பாம்பின் படத்தையுடைய ஆதிசேஷன் மீது அறிதுயில் செய்யும் திருமாலுக்கு மருகரே, சிவந்த வேலாயுதத்தை உடையவரே!.
நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிங்குங் குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான் பணங்காட்டி மல்குற் குரகுங் குமரன் பதாம்புயத்தை வணங்லாத் தவைaங்கி தெங்கே யெனக்கிங் ஙன் வாய்த்ததுவே. |
42 |
கொழுப்புடன் கூடிய தசைகள் மிகுதியாகத் தோன்றுகின்ற தொழுவமாகிய உடலை விட்டு அகன்று ஒப்பற்ற முக்தியை அடைந்து நிலைபெற்று இருத்தற்குரிய வழியைக் காட்டியருளி அடியேனை ஆட்கொண்ட குருநாதரும், குறவர் குலத்தில் தோன்றிய அழகிய இளமான் போன்ற வள்ளியம்மையின் பொருட்டு உள்ளம் உருகுகின்றவருமான திருமுருகப்பெருமானின் தாமரை மலர் போன்ற திருப்பாதங்களைப் பணியாத தலையானது எவ்விதமாக வந்து அடியேனுக்குக் கிடைத்தது?.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழிந்து, டழிந்தது, மலர், என்னும், போயிற்று, பட்டதால், மீது, காலே, போயின, மாணிக்கமே, மயில், பம்பரம், இனிமையான