திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு
சேவிப்போர் கூற்று
வேறுபல் உருவின் குறும்பல் கூளியர் சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி, 'அளியன் றானே முதுவாய் இரவலன் வந்தோன் பெரும!நின் வண்புகழ் நயந்'தென |
285 |
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித் |
முருகன் அருள்புரிதல்
தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின் வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி, |
290 |
'அஞ்சல் ஓம்புமதி; அறிவல்நின் வர'வென அன்புடன் நன்மொழி அளைஇ விளிவின்று இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒருநீ யாகித் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல்கும்;அதி பலவுடன் |
295 |
தெய்வத்து இளநலத்துடன் காட்சி தரும்படி வேண்டல் முருகன் தெய்வநலஞ் சான்ற அழகொழுகும் உருவினனாய் வானம் தோயும் நெடியவனாய் வந்து காட்சிதர வேண்டும். மனங்கவரும் உயர்ந்த நிலையில் தழுவிக் கொள்ள வேண்டும். பண்டை நாள் தொட்டு கமழும் மணமாக அவன் விளங்குபவன். தெய்வமாக விளங்குபவன். இளமைக் கோலமாக விளங்குபவன். நலத்தின் வெளிப்பாடாக விளங்குபவன். இந்தத் தன்மையையெல்லாம் அவன் என்னிடம் வெளிப்படுத்த வேண்டும். அஞ்சாதே என்று சொல்லிப் பாதுகாக்க வேண்டும். நின் வரவை அறிவேன் என்று ஆறுதல் கூற வேண்டும். அன்பு மொழி கலந்து பேச வேண்டும். இருண்ட கடலால் சூழப்பட்ட உலகில் காத்தளிக்கும் கடவுளாக நீ மட்டுமே விளங்க வேண்டும் என்பதுதான் நாங்கள் வேண்டும் பரிசில்.
அருவியின் காட்சியும் இயற்கைவளமும்
வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து ஆர முழுமுதல் உருட்டி வேரற் பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல. |
300 |
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை நாக நறுமலர் உதிர ஊகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று |
305 |
நன்பொன் மணிநிறம் கிளரப்பொன் கொழியா வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக். |
310 |
கோழி வயப்பெடை இரியக் கேழலொடு இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம் பெருங்கல் விடரளைச் செறியக் கருந்கோட்டு ஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்று |
315 |
இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே. |
பழமையால் முதிர்ச்சி பெற்ற சோலை அருவிப்பழம் முதிர்ந்த சோலை அருவி அடித்துக்கொண்டு வரும் பல்வேறு பழப் பொருள்களாவன. அருவி துணிக்கொடியைப் போல் அசைந்தாடிக் கொண்டு வருகிறது. சந்தன மரத்தை வேரோடு உருட்டிக் கொண்டு வருகிறது. சிறுமூங்கிலைப் பூவோடும் புதரோடும் சாய்த்துக் கொண்டு வருகிறது. உயர்ந்த மலை முகடுகளில் பாறைப்பொந்துகளில் சூரியனைப்போல் தேன் கூடுகள் இருக்கும்.அவை சிதையப் பாய்ந்து வருகிறது. ஆசினிப் பலாவின் பழுத்த சுளைகள் கலந்துவரப் பாய்ந்து வருகிறது. மணம் மிக்க நாகமரப் பூக்கள் (புன்னை மலர்கள்) உதிரும்படி மோதித் தாக்கிக் கொண்டு வருகிறது. பருத்த முகமுடைய முசுக் குரங்குகள் நடுங்கும்படி பாய்கிறது. பெண்யானை மகிழும்படி அலை வீசுகிறது. ஆண்யானைகளின் தந்தங்களின் மீது அலை தத்துகிறது. மழைவெள்ளம் பொன்னிறத்திலும் ஊற்றுநீர் மணிநிறத்திலும் அமைந்து பொன்போன்ற விலைமதிப்புள்ள போருளகளை ஈர்த்துக் கொண்டு பாய்கிறது. வாழைமரத்தை அடியோடு சாய்த்து உருட்டிக் கொண்டு வருகிறது. தென்னை மரத்தைத் தாக்கும்போது உதிர்ந்த இளநீர்க்குலைகளைப் புரட்டிக்கொண்டு வருகிறது. மிளகுக்கொடி மிளகுகுகுலையோடு சாய மோதுகிறது. புள்ளிமயில் மருண்டு தன் கூட்டத்தோடு ஓடப் பாய்கிறது. காட்டுக்கோழிகளும் அவ்வாறே ஓடும்படி பாயந்து வருகிறது. காட்டுப்பன்றியும் அதனை அடித்துத் தின்னும் புலியும் வெள்ளத்தைக் கண்டு அஞ்சி ஒரே கல்லுக் குகையில் அடைந்து கொள்ளும்படி பாய்கிறது. ஆமா என்னும் காட்டாட்டுக் கடாக்கள் வெள்ளத்தைக் கண்டு அஞ்சித்தம் பெண் ஆமாக்களை அழைக்கும் வகையில் அழைப்பொலியை எழுப்பும்படி வெள்ளம் சாய்கிறது. இழும் என்னும் ஓசையுடன் இறங்கிப் பாயும் இத்தகைய அருவிகளைக் கொண்டதுதான் பழமுதிர் சோலைமலை. இத்தகைய சோலைமலைக்கெல்லாம் உரிமை பூண்ட கடவுள் முருகன்.
திருமுருகாற்றுப்படை முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுருகாற்றுப்படை - பத்துப்பாட்டு, வருகிறது, வேண்டும், கொண்டு, திருமுருகாற்றுப்படை, விளங்குபவன், பாய்கிறது, இலக்கியங்கள், முருகன், பத்துப்பாட்டு, இத்தகைய, சோலை, அருவி, கண்டு, பழமுதிர், பாய்ந்து, உருட்டிக், வெள்ளத்தைக், என்னும், அவன், நின், உருவின், வேறுபல், சங்க, சான்ற, தெய்வத்து, முழுமுதல், உயர்ந்த, பலவுடன், பரிசில், தாக்கிக்