பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு
ஒதுக்குப் புற நாடுகளின் வளம்
மழைவீழ்ந் தன்ன மாத்தாட் கமுகின் புடைசூழ் தெங்கின் முப்புடைத் திரள்கா யாறுசெல் வம்பலர் காய்பசி தீரச் |
365 |
சோறடு குழிசி யிளக விழூஉம் வீயா யாணர் வளங்கெழு பாக்கத்துப் |
அடுத்துப் பாக்குத் தோட்டமும், தென்னந் தோப்பும் சூழ்ந்த பாக்கத்தை அடையலாம். பாக்கு மரங்கள் அடியில் பருத்திருக்கும். மழை மேகங்கள் போல ஓங்கி உயர்ந்திருக்கும். அந்தத் தோப்புகளைச் சூழ்ந்து தென்னந் தோப்பு. அதன் தேங்காயில் மூன்று கண். அக்காய் சோறாக்கும் பானைக்குப் பக்கத்தில் விழும். தேங்காய் போட்டுச் சமைத்தால் சோறு இளகி வருமாம். அந்த வழியாகச் செல்லும் புதியவர்கள் தேங்காயும் தின்னலாம் தேங்காய்ச் சோறும் பெறலாம். பருவ காலம் என்று இல்லாமல் ஆண்டு முழுவதும் பெறப்படுவதால் தென்னையை வீயா யாணர் (அழியாத வருவாய்) என்பர்.
பன்மர நீளிடைப் போகி நன்னகர் விண்டோய் மாடத்து விளங்குசுவ ருடுத்த வாடா வள்ளியின் வளம்பல தரூஉம் |
370 |
நாடுபல கழிந்த பின்றை நீடுகுலைக் |
வள்ளிக் கொடி வாடக் கூடியது. வாடா வள்ளி என்பது கற்பகக் கொடி. கற்பக மரம் போல் கற்பகக் கொடியும் கற்பனை. பொன்னால் செய்யப்பட்ட கற்பகப் பூவை மகளிர் தலையில் அணிந்து கொள்வது வழக்கம். அறுகம்புல்லை வாடாவள்ளி என்றனரோ எனவும் எண்ணத் தூண்டுகிறது. இந்த வாடா வள்ளி போல் வளம் தரும் பல நாடுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும்.
திருவெஃகாவின் சிறப்பும் திருமால் வழிபாடும்
காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப் பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண் வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்க் |
அடுத்து பொதும்பர் என்னும் அடர்காடுகள் வழியாகச் செல்ல வேண்டும். குயின் என்பது மேகம். குயின் நுழைந்து செல்ல வேண்டிய அளவுக்கு அந்த அடர்காட்டுப் பொதும்பரில் மரங்கள் ஓங்கி உயர்ந்திருக்கும். வெயில்கூட நுழைய முடியாது. பொதும்பர் மலைப்பகுதியில் இருந்தால் அதனைச் சிலம்பு என்பர். காரணம் மலை எதிரொலிக்கும். காந்தள் பூத்திருக்கும் சிலம்பில் களிறு படிந்திருப்பது போல் பாம்பணையில் திருமால் பள்ளி கொண்டிருப்பான். அவனைத் தொழுது கொண்டே மேலும் செல்லலாம். (இப்போதுள்ள சின்ன காஞ்சி வரதராசப் பெருமாள்) காந்தள் மலர் படம் விரித்திருக்கும் நாகத்துக்கும், களிறு கரியநிறத் திருமாலுக்கும் உவமை.
குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப் | 375 |
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூக் காரகற் கூவியர் பாகொடு பிடித்த விழைசூழ் வட்டம் பால்கலந் தவைபோ னிழறாழ் வார்மண னீர்முகத் துறைப்பப் புனல்கால் கழீஇய பொழிறொறுந் திரள்காற் |
380 |
சோலைக் கமுகின் சூல்வயிற் றன்ன நீலப் பைங்குடந் தொலைச்சி நாளும் பெருமகி ழிருக்கை மரீஇச் சிறுகோட்டுக் |
பருத்த அடிமரத்தைக் கொண்டது காஞ்சிமரம். பச்சையான இலைகளையுடைய குருகுக் கொடி அம்மரத்தைச் சுற்றிக்கொண்டு படரும். பூத்திருக்கும் அப்பூவிதழின் அடிப்பகுதியில் வரிகள் காணப்படும். (மாதவிக் கொடியொடு குருகுக்கொடி ஒப்புமை உடையது) (குருகுக்கொடி காஞ்சி மரத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது போல் கையைச் சுற்றிக் கொண்டிருக்கும் வளையலும் குருகு எனப்பட்டது) குருகு சுற்றிய காஞ்சியின் நிழலானது மணலில் தேங்கியிருக்கும் நீரில் விழும். அந்த நிழலினைப் போலக் கூவியர் சுடும் வட்டம் (அப்பம்) இருக்கும். சுட்ட வட்ட-அப்பத்தை அவர்கள் பாலில் கலந்து தருவார்கள். காரகல் என்னும் கருமையான வடையைச் சட்டியில் திரியிழையாகச் சுற்றி வட்டம் சுடுவார்கள். (இக்காலத்து ஜாங்கிரி போன்றது அக்காலத்து வட்டம் என்னும் பண்ணியம்.) காஞ்சி மகிழ்ச்சிப் பூங்காவில் இப்பண்ணியம் (பலகாரம்) பெறலாம். பொழில்களில் புனல் பாய்ந்து மரத்தின் கால்களைக் கழுவிச் செல்லும். பொழிலில் வைத்திருக்கும் நீலப் பைங்குடங்கள் பாக்கு மரத்தின் பாளை கருவுற்றிருப்பது போல் இருக்கும். நீலம் என்னும் கள் வகையைக் கொண்டிருப்பது நீலப் பைங்குடம். இந்தக் குடத்தைத் தொலைச்சலாம், அதாவது முற்றிலுமாகப் பருகலாம். இந்தப் பகுதியைப் பெருமகிழ் இருக்கை என்பர். (பெருமகழ்ச்சி தரும் இருப்பிடம்) இந்த இருப்பிடங்களை மருவிக்கொண்டு (பயன்படுத்திக் கொண்டு) செல்லலாம்.
குழவித் திங்கட் கோணேர்ந் தாங்குச் சுறவுவா யமைத்த சுரும்புசூழ் சுடர்நுத |
385 |
னறவுபெயர்த் தமர்த்த நல்லெழின் மழைக்கண் மடவரன் மகளிரொடு பகல்விளை யாடிப் |
மடவரல் என்போர் மடப்பத் தன்மை கொண்ட பருவம் எய்தாத இளம்பெண்கள். அவர்கள் இளநிலாவின் கோண் வளைவைப் போன்ற நெற்றியைக் கொண்டவர்கள். சுறவு என்னும் கரும்பாம்பின் வாயிலிருந்து வெளிவருவது போல் கூந்தலில் வண்டு மொய்க்க மலரும் நெற்றியைக் கொண்டவர்கள். நாவுக்கு இன்பம் தரும் நறவு என்னும் தேனைப் பிழிந்து வைத்தாற் போன்று கண்ணுக்கு இன்பம் தரும் கட்டழகு எழிலாக வாய்க்கப் பெற்றவர்கள். மழை போன்ற அவர்களது ஈரக் கண்களில் மடப்பத் தன்மை காணப்படும். பகலெல்லாம் இவர்களோடு விளையாடிக் கொண்டே செல்லலாம்.
பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும் பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைச் செவ்விகொள் பவரோ டசைஇ யவ்வயி |
390 |
னருந்திறற் கடவுள் வாழ்த்திச் சிறிதுநுங் கருங்கோட் டின்னிய மியக்கினிர் கழிமின் |
வேனில் விழாதான் பூமலி பெருந்துறைச் செவ்வி என்று போற்றப்படுகிறது. (சிலப்பதிகாரம் போற்றும் இந்திர விழா போன்றது காஞ்சியில் நடைபெற்ற திருமாலின் திருவிழா) துறக்கம் என்னும் சுவர்க்கம் பழமைச் சிறப்பினை உடையது. அதனைப் பெறுவதென்பது இயலாத ஒன்று. துறக்கம் என்பது பொய்மை. (காஞ்சி வேனில் விழா பெற்று மகிழக்கூடிய துறக்கம்.) உண்மையில் பொய்யாத மரபினைக் கொண்டு மண்ணுலகில் இருக்கும் துறக்கந்தான் வேனில் காலமும் அதில் கொண்டாடப்படும் விழாவும். காஞ்சியில் இந்த விழா நடைபெறும். இந்த விழாவைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்து நீங்களும் கொண்டாடிக்கொண்டு அங்குச் சிலநாள் தங்குங்கள். அக்காலத்தில் கடவுளை (இந்திரன், காமன்) வாழ்த்திப் பாடுங்கள். \உங்களிடம் உள்ள கருங்கோட்டு இனிய யாழை மீட்டிக் கொண்டே பாடுங்கள். இனிய இசைக் கருவிகளையம் சேர்த்து இசைத்துக்கொண்டே பாடுங்கள். பின் உங்களின் குறியிடம் நோக்கி வழிமேற் செல்லுங்கள்.
கச்சி மூதூரின் சிறப்பு
காழோ ரிகழ்பதம் நோக்கிக் கீழ நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளங் கடுஞ்சூன் மந்தி கவருங் காவிற் |
395 |
களிறுகத னடக்கிய வெளிறில் கந்திற் |
இளந்திரையன் ஊர் கச்சி. அம் மாநகரத் தெருக்களில் யானைகள் கட்டப்பட்டிருக்கும். காடுகளில் யானைகளைக் குழியில் விழச்செய்து பழக்கிக்கொண்டிருப்பர். காழோர் என்போர் யானைப் பாகர். அவர்கள் சோற்றில் நெய் ஊற்றிப் பிணைந்து கவளமாக்கிப் பழக்கி வைத்திருக்கும் யானைக்கு ஊட்டுவர். இவர்கள் சோர்ந்திருக்கும் காலம் பாரத்து கருவுற்றிருக்கும் மந்தி நெய்ம்மிதி கவளத்தைக் கவர்ந்து சென்று உண்ணும். வெளிறு என்பது யானை கட்டிவைக்கும் இடம். கந்து என்பது பற்றுக்கோடு இங்கு யானையைக் கட்டி வைக்கும் தூண். வெளிறு இல்லாத கந்து என்பது, வைரம் பாயாத இளங் குச்சிகளால் மூடி, யானையை விழச் செய்யாத பற்றுக்கோடு உள்ள இடம். வேறு சில காழோர் வெளிறு இல்லாத கந்தினைப் பயன்படுத்திக் காட்டிலுள்ள யானையைக் குழியில் விழச்செய்து அதன் சினத்தை அடக்கிக் கொண்டிருப்பார்கள்.
றிண்டேர் குழித்த குண்டுநெடுந் தெருவிற் படைதொலை பறியா மைந்துமலி பெரும்புகழ்க் கடைகால் யாத்த பல்குடி கெழீஇக் கொடையுங் கோளும் வழங்குநர்த் தடுத்த |
400 |
வடையா வாயின் மிளைசூழ் படப்பை |
கொடுக்கலும் வாங்கலுமாகப் பரபரப்பாக உள்ள தெருக்களில் நடந்து செல்வதுகூட எளிதாக இருக்காது. திண்மையான தேர் சென்றதால் நீண்ட தெருக்கள் குண்டும் குழியுமாக இருக்கும். அத்தெருக்களில் படை வீரர்களின் குடும்பங்கள் வாழும். அக்குடியினர் வலிமையால் புகழ் பெற்றவர்கள். வெளியிடங்களில் படைக்கருவிகளும் கையுமாகத் திரிவர். அவர்கள் அந்த வீரப் புகழைக் கடைக்காலிலே கட்டித் தூக்கி எறிந்து விட்டு வழியில் செல்வோரைத் தடுத்து பிடித்து வந்து கொடை வழங்குவதில் ஆர்வம் காட்டுவர். (கடைக்கால் = தண்ணீர் பாயும் கடைமடை) திரையன் அரண்மனையின் வாயில் கதவம் எப்போதும் அடைக்கப் படாமல் திறந்தே இருக்கும். · காவல் புரிவோரும் தம் வீரத்தை வெளிப்படுத்தாமல் வழிப் போக்கர்களைத் தடுத்து அரசனிடம் கொடை பெறச் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பொரும்பாணாற்றுப்படை - பத்துப்பாட்டு, என்னும், போல், என்பது, காஞ்சி, இருக்கும், அந்த, தரும், இலக்கியங்கள், வட்டம், செல்ல, செல்லலாம், கொண்டே, பொரும்பாணாற்றுப்படை, உள்ள, வெளிறு, பாடுங்கள், துறக்கம், வேனில், விழா, கொடி, நீலப், பத்துப்பாட்டு, என்பர், வாடா, வீயா, யாணர், காஞ்சியில், வளம், சங்க, பெருந்துறைச், கமுகின், பெற்றவர்கள், தன்மை, மடப்பத், நெற்றியைக், கொண்டவர்கள், இனிய, இன்பம், பூமலி, யானை, பற்றுக்கோடு, கந்து, யானையைக், இல்லாத, கொடை, தடுத்து, இடம், காழோர், நெய்ம்மிதி, என்போர், மந்தி, தெருக்களில், விழச்செய்து, குழியில், கச்சி, பயன்படுத்திக், குயின், வழியாகச், பொதும்பர், காந்தள், பூத்திருக்கும், விழும், களிறு, பள்ளி, திருமால், கற்பகக், வள்ளி, காலம், பெறலாம், வேண்டும், செல்லும், உயர்ந்திருக்கும், ஓங்கி, குருகு, கொண்டிருப்பது, தென்னந், போன்றது, வைத்திருக்கும், மரத்தின், சுற்றிக், உடையது, கூவியர், சுற்றிய, மரங்கள், பாக்கு, குருகுக்கொடி, காணப்படும், கொண்டு