மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு
பூந்தலை முழவின் நோன்றலை கடுப்பப் பிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர் பலவகை விரித்த வெதிர்பூங் கோதையர் பலர்தொகுபு இடித்த தாதுகு சுண்ணத்தர் தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய் |
400 |
நீடுகொடி யிலையினர் கோடுசுடு நூற்றினர் இருதலை வந்த பகைமுனை கடுப்ப இன்னுயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்து ஏங்குவன ரிருந்தவை நீங்கிய பின்றைப் பல்வேறு பண்ணியந் தழீஇத்திரி விலைஞர் |
405 |
மலைபுரை மாடத்துக் கொழுநிழல் இருத்தர |
பிடகை என்பது பூக்கூடை. முழவின் வாய்போல் அகன்ற வாயையுடைய பிடகையில் பூ வைத்துக் கொண்டு மகளிர் பூ விற்றனர். சிலர் மணக்கும் பூ மாலை விற்றனர் சிலர் சுண்ணம் விற்றனர். சுண்ணம் என்பது talc poweder, பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு ஆகியனவும் விற்கப்பட்டன. போர்முனை போல் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை நடைபெற்றது. இந்தக் கடைகள் போனபின் பண்ணியக் கடைகள் மாடிவீடுகளின் நிழலில் வைக்கப்பட்டன. பண்ணியம் என்பது இட்டிலி, அப்பம், வடை முதலான பலகார வகைகள்.
முது மகளிர் நுகர்பொருள்களை ஏந்தித் திரிதல்
இருங்கடல் வான்கோடு புரைய வாருற்றுப் பெரும்பின் னிட்ட வானரைக் கூந்தலர் நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர் செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை |
410 |
செல்சுடர்ப் பசுவெயிற் றோன்றி யன்ன செய்யர் செயிர்த்த நோக்கினர் மடக்கண் ஐஇய கலுழு மாமையர் வையெயிற்று வார்ந்த வாயர் வணங்கிறைப் பணைத்தோட் சோர்ந்துகு வன்ன வயக்குறு வந்திகைத் |
415 |
தொய்யில் பொறித்த சுணங்கெதி ரிளமுலை மையுக் கன்ன மொய்யிருங் கூந்தல் மயிலிய லோரும் மடமொழி யோரும் கைஇ மெல்லிதின் ஒதுங்கிக் கையெறிந்து கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப் |
420 |
தொன்முது பெண்டிர், மயிலியலோர், மடமொழியோர் என்னும் பல்திற மகளிர் கல்லா மாந்தரொடு உறவாடும்போது கையால் தட்டிக்கொடுக்கும் வகையில் தாக்கி உறவாடி மகிழ்ந்தனர். தொன்முது பெண்டிர் தன் நரைமுடியில் கடலில் நுரையலையில் மிதந்துவரும் சங்கு போல் கொண்டை போட்டிருந்தனர். மயிலியலோர் எப்படியிருந்தனர்? கருமேகம் கொட்டி வழிவது போல் கூந்தல். பசும்பொன்னைச் செந்தீயில் போட்டுச் செய்த பாவை இளவெயிலில் மிளிர்வது போன்ற செய்ய மேனி. அதில் ‘ஐ’ என்று வியக்கும்படி ஒழுகும் மாமை நிறம். (‘ஐ வியப்பு ஆகும்’ – தொல்காப்பியம்) கூர்மையான பற்கள் பகட்டிக் காட்டும் வாய். ‘கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமல்‘ அவ்வாய் பேசும் மடமொழி. வளைந்த மூங்கில் போன்ற தோள். அந்தத் தோளில் கிடந்து கிடந்து சோர்ந்து போய்க் கழன்று விழுவது போன்ற வந்திகை என்னும் தோளணி. கொளுத்தக் கொண்டு கொண்டது விடாத மடக் கண்ணில் ஊடும் சினம் கொண்ட பார்வை. இப்படிப்பட்ட மகளிர் இந்த மெய்ப்பாடுகளைக் கல்லாத காளையரைத் தட்டிக்கொடுத்து அவர்களோடு பேசித் திளைத்தனர்.
புடையமை பொலிந்த வகையமை செப்பிற் காம ருருவிற் றாம்வேண்டு பண்ணியம் கமழ்நறும் பூவொடு மனைமனை மறுக |
திருவிழாக் காட்சிகள்
ஏழாம் நாளில் தீர்த்த நீரில் ஆடுதல்
ஏழாம் நாளில் தீர்த்த நீரில் ஆடுதல்
மழைகொளக் குறையாது புனல்புக மிகாது கரைபொரு திரங்கு முந்நீர் போலக் |
425 |
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி ஆடுதுவன்று விழவி னாடார்த் தன்றே மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் நாளங் காடி நனந்தலைக் கம்பல |
430 |
பூ விற்போரும், பண்ணியம் விற்போரும் வீடு வீடாகச் சென்று விற்பதும் உண்டு. மழைமேகங்கள் மொண்டு செல்வதால் கடல் குறைவது இல்லை. ஆற்று வெள்ளம் வந்து சேர்வதால் அளவு கூடுவதும் இல்லை. அதுபோலக் கூடல் நகரத்துச் செல்வம் பிறர் கொண்டுசெல்வதால் குறைவதும் இல்லை. பிறர் கொண்டுவந்து தருவதால் மிகுவதும் இல்லை. அரசனின் ஒவ்வொரு வெற்றியின்போதும் வெற்றிவிழா ஏழு நாள் கொண்டாடப்படும். அதற்கு ‘ஆடு துவன்று விழா’ என்று பெயர். செங்கழுநீர் பூத்த குளத்தில் வெற்றி தந்த வேல், வாள் முதலானவற்றைக் கழுவி அக்குளக்கரையில் அந்த ‘ஆடு துவன்று விழா’ கொண்டாடப்படும். அந்த விழா நாடு முழுவதும் ஆங்காங்கே கொண்டாடப்படும். அந்த விழாவின்போது எழும் ஆரவாரம் போல மதுரை நகரத்துக் கடைத்தெருவில் பகல் பொழுதில் ஆரவாரம் எழுந்துகொண்டேயிருக்கும்.
செல்வர்கள் செல்லும் நிலை
வெயிற்கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச் செக்கர் அன்ன சிவந்துணங் குருவிற் கண்பொரு புகூஉம் ஒண்பூங் கலிங்கம் பொன்புனை வாளொடு பொலியக் கட்டித் திண்டேர்ப் பிரம்பிற் புரளுந் தானைக் |
435 |
கச்சந் தின்ற கழறயங்கு திருந்தடி மொய்ம்பிறந்து திரிதரும் ஒருபெருந் தெரியல் மணிதொடர்ந் தன்ன வொண்பூங் கோதை அணிகிளர் மார்பி னாரமொ டளைஇக் காலியக் கன்ன கதழ்பரி கடைஇக |
440 |
காலோர் காப்பக் காலெனக் கழியும் |
குதிரையில் திரியும் காவலரும், கால்நடையில் திரியும் காவலரும் கடைத்தெரு முழுவதும் காவல் புரிவர். அவர்கள் செக்கர் வானம் போல் சிவந்த உடை அணிந்திருப்பர். அந்தச் செந்நிறத்தில் பட்டுக் கதிரவன் ஒளியே மங்கிப் போகும். அந்த ஆடையுடன் சேர்த்து வாளும் கட்டியிருப்பர். வாளின் கைப்பிடி பொன்னால் ஆனது. ‘திண்தேர்ப் பிரம்பு’ என்பது பிரம்பாலான வில்லுவண்டி. (இருக்கை, சக்கரம் போன்ற இன்றியமையா உறுப்புக்களைக் கொண்ட சிறிய வண்டி) இந்தத் தேரில் ஏறித் திரியும் தானைக்காவலர்களும் (படைக்காவலர்களும்) உண்டு. அவர்களின் கால்களில் கழல் இருக்கும். அது கச்சம் போல் இறுகலாக மாட்டப்பட்டிருப்பதால் அவர்களின் காலைத் தின்று அவ்விடத்தில் காப்புக் காய்த்திருக்கும். அவர்கள் மார்புக்குக் கீழே தெரியல் என்னும் அடையாள மாலை, மணி கோத்தது போன்ற பூமாலை ஆகியவற்றைச் சந்தனம் பூசிய மார்பில் அணிந்திருப்பர். இவர்கள் காற்றைப்போல் பறக்கும் குதிரை மேலும் திரிவர், கால்நடையாகவும் திரிவர். காவற்பணி மேற்கொண்டு கடைத்தெருவில் திரிவர்.
வான வண்கை வளங்கெழு செல்வர் |
நிலா முற்றங்களிலிருந்து சேவிக்கும் மகளிர்
நாள்மகிழ் இருக்கை காண்மார் பூணொடு தெள்ளரிப் பொற்சிலம் பொலிப்ப வொள்ளழல் தாவற விளங்கிய வாய்பொன் னவிரிழை |
445 |
அணங்குவீழ் வன்ன பூந்தொடி மகளிர் மணங்கமழ் நாற்றந் தெருவுடன் கமழ ஒண்குழை திகழும் ஒளிகெழு திருமுகந் திண்காழ் ஏற்ற வியலிரு விலோதந் தெண்கடற் றிரையின் அசைவளி புடைப்ப |
450 |
நிரைநிலை மாடத் தரமியந் தோறும் மழைமாய் மதியிற் றோன்றுபு மறைய |
மாடவெளியில் மகளிர் உலாவுவர். வானம் போல் வழங்கும் வளம் படைத்த செல்வர் குடும்பத்தைச் சேர்ந்த மகளிர் அரசன் அரியணையில் இருந்துகொண்டு கொடை வழங்கும் நாள்மகிழ் இருக்கை காண்பதற்காகத் தெருவில் ஓடுவர். அப்போது அவர்கள் அணிந்திருந்த சிலம்பின் பரல் ஒலிக்கும். பொன்னணிகள் ஒளிரும். அழகிய வளையல்கள் பாடும். அழகுத் தெய்வங்களே ஆசை கொள்ளும் அழகுடையவர்கள் அவர்கள். காதில் ஒளி வீசும் குழைகள் அவர்களின் கட்டழகுத் திருமுகத்தை மேலும் கவின் பெறச் செய்யும். அவர்கள் ஓடும்போது தெருவெல்லாம் மணம் வீசும். மற்றொருபுறம் மாடத்தில் உலாவும் மயிலியலார். மழை மேகத்தில் மறையும் மதியம் போல மாடவெளியில் பட்டப் பகலில் தென்றல் காயும் மகளிர் அசையும் தம் கூந்தலில் மறைந்து மறைந்து வெளிப்படுவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதுரைக்காஞ்சி - பத்துப்பாட்டு, மகளிர், போல், என்பது, அந்த, இல்லை, இலக்கியங்கள், திரிவர், இருக்கை, பண்ணியம், அவர்களின், பெண்டிர், மதுரைக்காஞ்சி, விற்றனர், கொண்டாடப்படும், பத்துப்பாட்டு, என்னும், கொண்டு, திரியும், கடைத்தெருவில், செக்கர், முழுவதும், துவன்று, விழா’, தெரியல், ஆரவாரம், மேலும், மாடவெளியில், வழங்கும், வீசும், மறைந்து, நாள்மகிழ், செல்வர், வானம், அணிந்திருப்பர், ‘ஆடு, காவலரும், மிகாது, கடைகள், பாவை, வன்ன, கன்ன, சுண்ணம், மாலை, சங்க, முழவின், கமழ்நறும், சிலர், கூந்தல், கல்லா, குறையாது, கூடல், விற்போரும், உண்டு, கொண்ட, கிடந்து, தொன்முது, மயிலியலோர், கொண்டது, பிறர்