பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து, ஆசறு செய்யாராய், ஆற்றப் பெருகினும், மாசு அற மாண்ட மனம் உடையர் ஆகாத கூதறைகள் ஆகார், குடி. |
106 |
துன்பம் நீங்குமாறு மிகவும் அன்பு செய்து குற்றம் அற்றவைகளைச் செய்யாதவராய் செல்வத்தால் மிகப்பெருகி வாழ்ந்தாலும்; மாசு அற மாண்ட மனம் உடையர் ஆகாத கூதறைகள் - குற்றம் அற மாட்சிமைப்பட்ட மனமுடையராகாத கூளங்கள் நற்குடியிற் பிறந்தவராகார்.
கருத்து:கீழ்மக்கள் செல்வம் பெறினும் மனத்தூய்மையிலராகலின்உயர்குடியிற் பிறந்தாரை ஒவ்வார்.
13. கீழ்மக்கள் செய்கை
நெறியால் உணராது நீர்மையும் இன்றி, சிறியார், 'எளியரால்!' என்று,-பெரியாரைத் தங்கள் நேர் வைத்து, தகவு அல்ல கூறுதல்- திங்களை நாய் குரைத்தற்று. |
107 |
அறிவிலார் அறிவுடையோர்களை நெறியால் உணராது தகுதியும் இன்றி தாழ்மையானவர் என்று நினைத்து தங்களுக்கு முன்பு அவர்களை இருக்கச் செய்து தகுதியல்லாத வார்த்தைகளைச் சொல்லுதல் மதியை நாய் குரைத்தாற் போலும்.
கருத்து: சிறியோர்கள் பெரியோர்களைப் பார்த்து அடாதன கூறுதல் சந்திரனை நாய் குரைத்தாற் போலும்.
'மறுமை ஒன்று உண்டோ ? மனப்பட்ட எல்லாம் பெறுமாறு செய்ம்மின்' என்பாரே-நறு நெய்யுள் கட்டி அடையைக் களைவித்து, கண் சொரீஇ, இட்டிகை தீற்று பவர். |
108 |
மறுமை என்பது ஒன்று உளதோ? மனம் விரும்பியவற்றையெல்லாம் அடையும் தன்மையைச் செய்யுங்கள் என் றுபதேசிப்பவர் நல்ல நெய்யுள் தோய்க்கப் பெற்றுப் பாகு கலந்த அடையை உண்ணாமல் நீக்கி கண்களை மூடிச் நெங்கல்லை உண்ணச் செய்பவரோடு ஒப்பர்.
கருத்து: அறிவில்லார் நன்னெறி யிருக்கவும் தீநெறியைப் போதிப்பார்கள்.
கண் இல் கயவர் கருத்து உணர்ந்து, கைம்மிக நண்ணி, அவர்க்கு நலனுடைய செய்பவேல்,- எண்ணி இடர் வரும் என்னார், புலி முகத்து உண்ணி பறித்துவிடல். |
109 |
கண்ணோட்டம் இல்லாத கீழ்மக்களது எண்ணத்தை அறிந்து செயல் மிக அவரையடைந்து அவர்க்கு வேண்டிய நன்மைகளைச் செய்வாராயின் துன்பம் வரும் என்பதை ஆராயாதவராகி இரக்கத்தால் புலியினது முகத்தின்கண் உள்ள உண்ணியை எடுத்துவிடுதலோ டொக்கும்.
கருத்து: தீயவர்களுக்கு நன்மை செய்தல் தனக்குக் கேடு தேடிக்கொள்ளுதலாக முடியும்.
திருந்தாய் நீ, ஆர்வத்தை! தீமை உடையார், 'வருந்தினார்' என்றே வயப்படுவது உண்டோ ? அரிந்து அரிகால் பெய்து அமையக் கூட்டியக் கண்ணும், பொருந்தா மண், ஆகா, சுவர். |
110 |
அரிதாளை அரிந்து செப்பம் செய்து பொருந்துமாறு தலைக் கூட்டிய விடத்தும் அவர் எடுக்கும் பொழுதே பொருந்தாத மண் பின்னர்ப் பொருந்திச் சுவராக ஆதல் இல்லை (ஆதலால்) நம் பொருட்டு இவர் வருத்தமுற்றார் என்பதற்காக வசமாகப் பொருந்துதல் உண்டோ (இல்லை) நெஞ்சே அவர்மேல் பூண்ட அன்பினை விட்டுத் திருந்துவாயாக.
கருத்து: கீழ்மக்களுக்கு நன்மை செய்யினும் அதைஉட்கொண்டு செய்தார் விருப்பம்போல் நடவார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், உண்டோ, மனம், நாய், செய்து, நானூறு, பதினெண், கீழ்க்கணக்கு, பழமொழி, போலும், குரைத்தாற், ஒன்று, மறுமை, வரும், இல்லை, அரிந்து, நன்மை, அவர்க்கு, நெய்யுள், கீழ்மக்கள், உடையர், ஆகாத, மாண்ட, மாசு, சங்க, கூதறைகள், துன்பம், இன்றி, உணராது, நெறியால், குற்றம், கூறுதல்