பதிற்றுப்பத்து - 35. வென்றிச் சிறப்பு
துறை : வாகைத்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : மெய் ஆடு பறந்தலை
புரை சால் மைந்த! நீ ஓம்பல் மாறே, உரை சான்றனவால், பெருமை நின் வென்றி!- இருங் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு நெடுந் தேர்த் திகிரி தாய வியன் களத்து, அளகுடைச் சேவல் கிளை புகா ஆர, |
5 |
தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை, அந்தி மாலை விசும்பு கண்டன்ன செஞ் சுடர் கொண்ட குருதி மன்றத்து, பேஎய் ஆடும் வெல்போர் வீயா யாணர் நின்வயினானே. |
10 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 35. வென்றிச் சிறப்பு, இலக்கியங்கள், வென்றிச், பதிற்றுப்பத்து, சிறப்பு, மெய், பறந்தலை, சங்க, எட்டுத்தொகை, வண்ணம்