பதிற்றுப்பத்து - 36. வென்றிச் சிறப்பு
துறை : களவழி
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வாள் மயங்கு கடுந் தார்
வீயா யாணர் நின்வயினானே தாவாதாகும், மலி பெறு வயவே; மல்லல் உள்ளமொடு வம்பு அமர்க் கடந்து, செரு மிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று, பனை தடி புனத்தின், கை தடிபு, பல உடன் |
5 |
யானை பட்ட வாள் மயங்கு கடுந் தார், மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர், பொறித்த போலும் புள்ளி எருத்தின் புன் புற எருவைப் பெடை புணர் சேவல் குடுமி எழாலொடு கொண்டு, கிழக்கு இழிய; |
10 |
நிலம் இழி நிவப்பின் நீள் நிரை பல சுமந்து, உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆட; குருதிச் செம் புனல் ஒழுக; செருப் பல செய்குவை: வாழ்க, நின் வளனே! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிற்றுப்பத்து - 36. வென்றிச் சிறப்பு, இலக்கியங்கள், சிறப்பு, வென்றிச், பதிற்றுப்பத்து, கடுந், தார், மயங்கு, வண்ணம், சங்க, எட்டுத்தொகை, வாள்