திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
அரண வுணர்வுதனி லவ்வுணர்வை மாற்றிற் கரணமுங் காலுங்கை கூடும் - புரணமது கூடாமை யுங்கூடும் கூடுதலுங் கூட்டினுக்கு வாடாமை யுங்கூடும் வந்து. |
41 |
இன்றிங் கசேதனமா மிவ்வினைக ளோரிரண்டுஞ் சென்று தொடருமவன் சென்றிடத்தே - என்றுந்தான் தீதுறுவ னானாற் *சிவபதிதான் கைவிடுமோ மாதொருகூ றல்லனோ மற்று. |
42 |
*சிவாபதி |
அநாதி சிவனுடமை யாலெவையு மாங்கே அநாதியெனப் பெற்ற வணுவை - யநாதியே ஆர்த்த துயரகல வம்பிகிகையோ டெவ்விடத்துங் காத்த லவன்கடனே காண். |
43 |
தம்மிற் சிவலிங்கங் கண்டதனைத் தாம்வணங்கித் தம்மன்பால் மஞ்சனநீர் தாமாட்டித் - தம்மையொரு பூவாக்கிப் பூவழியா மற்கொடுத்துப் பூசித்தால் ஓவாமை யன்றை யுளன். |
44 |
தன்னைப் பெறுவதன்மேற் பேறில்லைத் தானென்றுந் தன்னைத்தான் பெற்றவன்றா னாரென்னில் - தன்னாலே எல்லாந்த னுட்கொண்டு கொண்டதனைக் கொள்ளாதே எல்லாமாய் நிற்கு மிவன். |
45 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், திருக்களிற்றுப்படியார், சாத்திரங்கள், சித்தாந்த, யுங்கூடும், இலக்கியங்கள்