திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
துன்பமா மெல்லாம் பரவசனாய்த் தான்றுவளில் இன்பமாந் *தன்வசன யேயிருக்கி - லென்பதனால் நின்வசனா யேயிருக்கின் நின்னுடனாம் நேரிழையாள் தன்வசனா யேயிருப்பன் றான். |
46 |
*தன்வசனாய்த் தானிருக்கில் |
செத்தாரே கெட்டார் கரணங்கள் சேர்ந்ததனோ டொத்தாரே யோகபர ரானவர்க - ளெத்தாலும் ஆராத வக்கரணத் தார்ப்புண்டிங் கல்லாதார் பேராமற் செல்வரதன் பின். |
47 |
கண்ணுங் கருத்துங் கடந்ததொரு பேறேயுங் கண்ணுங் கருத்துங் களிகூர - நண்ணி வடமடக்கி நிற்கும் வடவித்தே போல உடனடக்கி நிற்பார்கள்கா ணுற்று. |
48 |
வானகமு மண்ணகமு மாய்நிறைந்த வான்பொருளை ஊனகத்தே யுன்னுமதெ னென்றனையேல் - *ஏனகத்து வாதனையை மாற்றும் வகையதுவே மண்முதலாம் ஆதனமே யன்றோ வதற்கு. |
49 |
*யானகத்து |
கல்லிற் கமரிற் கதிர்வாளிற் சாணையினில் வல்லுப் பலகையினில் வாதனையைச் - சொல்லும் அகமார்க்கத் தாலவர்கண் மாற்றினர்கா ணையா சகமார்க்கத் தாலன்றே தான். |
50 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தாந்த, திருக்களிற்றுப்படியார், சாத்திரங்கள், கருத்துங், இலக்கியங்கள், கண்ணுங்