திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
உண்டெனி லுண்டாகு மில்லாமை யில்லையெனில் உண்டாகு மானமையி *லோரிரண்டா - முண்டில்லை என்னு மிவைதவிர்ந்த வின்பத்தை யெய்தும்வகை உன்னிலவ னுன்னுடனே யாம். |
36 |
*ஒன்றிரண்டாம் |
தூல வுடம்பாய முப்பத்தோர் தத்துவமும் மூல வுடம்பா முதனான்கு - மேலைச் சிவமாம் பரிசினையுந் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்த பவமாம் *பரிசறுப்பார் பார். |
37 |
*துரிசறுப்பார் |
எத்தனனையோ தத்துவங்க ளெவ்வெவகோட் பாடுடைய அத்தனையுஞ் சென்றங் களவாதே - சித்தமெனுந் *தூதனைப் போக்கிப்போய்த் தூக்கற்ற சோதிதனிற் பாதிதனைக் கும்பிடலாம் பார். |
38 |
*தூதுவனைப் போக்கிற் |
சாம்பொழுதி லேதுஞ் சலமில்லை செத்தாற்போல் ஆம்பொழுதி லேயடைய வாசையறிற் - சோம்பிதற்குச் சொல்லுந் துணையாகுஞ் சொல்லாத தூய்நெறிக்கட் செல்லுந் துணையாகுஞ் சென்று. |
39 |
*வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால் வேண்டின· தொன்றுமே வேண்டுவது - வேண்டினது *வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக வேண்டாமை வேண்டுமவன் பால். |
40 |
*குறள்: அவவறுத்தல் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தாந்த, திருக்களிற்றுப்படியார், சாத்திரங்கள், துணையாகுஞ், இலக்கியங்கள், பார்