திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
உணராதே யாது முறங்காதே யுன்னிற் புணராதே நீபொதுவே நிற்கி - லுணர்வரிய காலங்கள் செல்லாத காத லுடனிருத்தி காலங்கள் மூன்றினையுங் கண்டு. |
31 |
அறிவறிவாய் நிற்கி லறிவுபல வாமென் றறிவி னறிவவிழ்த்துக் கொண்ட - வறிவினராய் வாழ்ந்திருப்பர் நீத்தோர்கள் மானுடரின் மாணவகா தாழ்ந்தமணி நாவேபோற் றான். |
32 |
ஓசையெலா மற்றா லொலிக்குந் திருச்சிலம்பின் ஓசை வழியேசென் றொத்தொடுங்கி - லோசையினில் அந்தத்தா னத்தா னரிவையுட னம்பலத்தே வந்தொத்தா னத்தான் மகிழ்ந்து. |
33 |
1*சார்புணர்ந்து சார்பு கெடவொழுகி னென்றமையாற் 2*சார்புணர்த றானே தியானமுமாஞ் - சார்பு கெடவொழுகி னல்ல சமாதியுமாங் கேதப் படவருவ தில்லைவினைப் பற்று. |
34 |
1*குறள்: மெய்யுணர்தல் 2*சார்புணர்வு தானே |
அன்றிவரு மைம்புலனு நீயு மசையாதே நின்றபடி யேநிற்க முன்னிற்குஞ் - சென்று கருதுவதன் முன்னங் கருத்தழியப் பாயும் ஒருமகடன் கேள்வ னுனக்கு. |
35 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், திருக்களிற்றுப்படியார், சாத்திரங்கள், சித்தாந்த, கெடவொழுகி, சார்பு, இலக்கியங்கள், நிற்கி, காலங்கள்