திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
உள்ளும் புறம்பும் நினைப்பொழியி லுன்னிடையே வள்ள லெழுந்தருளு மாதினொடுந் - தெள்ளி அறிந்தொழிவா யன்றியே யன்புடையை யாயிற் செறிந்தொழிவா யேதேனுஞ் செய். |
51 |
**கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை யென்றமையாற் கண்ணப்ப னொப்பதோ 1*ரன்பதனைக் - கண்ணப்பர் தாமறிதல் காளத்தி யாரறித லல்லதுமற் 2*றியாமறியு மன்பன் றது. |
52 |
1*அன்பினை; 2*யாரறியும் **திருவாசகம்: திருக்கோத்தும்பி |
அவிழ்ந்த துணியி லவிழ்ந்த வவிழை அவிழ்ந்த மனத்தா லவிழ்க்க - அவிழ்ந்தசடை வேந்தனார்க் கின்னமுத மாயிற்றே மெய்யன்பிற் சேந்தனார் செய்த செயல். |
53 |
சுரந்த திருமுலைக்கே துய்ய *சிவ ஞானஞ் சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் - சுரந்த தனமுடையாள் தென்பாண்டி மாதேவி வாழ்ந்த மனமுடையா ளன்பிருந்த வாறு. |
54 |
*சிவஞானம் |
அன்பேயென் னன்பேயென் றன்பா லழுதரற்றி அன்பேயன் பாக வறிவழியும் - அன்பன்றித் தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை *சாற்றும் பழமன்றே தான். |
55 |
*சார்த்தும் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்களிற்றுப்படியார் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தாந்த, திருக்களிற்றுப்படியார், சாத்திரங்கள், சுரந்த, அவிழ்ந்த, இலக்கியங்கள், னொப்பதோ