சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
2. அஞ்சவத்தை இயல்பு
எண்ணவொன் றிலாத தீத மெய்திய துரியத் தொன்று நண்ணிடுஞ் சுழுத்தி தன்னில் நயந்துள தொன்று பின்னு மண்ணிடுங் கனவு தன்னி லாறேழாஞ் சாக்கிரத்திற் கண்ணுறு மஞ்சா றாய கருவிகள் மருவுந் தானே. இவ்வகை அவத்தை தன்னி லெய்திடுங் கரணமெல்லா மெய்வகை யிடத்தி லுற்று மேவுமா கண்டு மிக்க பொய்வகைப் பவம கற்றப் புரிந்திடி லருளாலாங்கே யைவகை யவத்தை யுய்க்குமறி வினாலறிந்து கொள்ளே. நீக்கமி லதீத மாசு நிறைந்தகே வலமா நீர்மை சாக்கிரங் கலாதி சேர்ந்த சகலமாந் தன்மை யாகு மூக்கமி லிரண்டுங் கூடா தொழியவோர் நிலையி னீடுஞ் சாக்கி ராதீதஞ் சுத்தத் தகைமைய தாகுந் தானே. |
3. தன்னுன்மை உணர்த்துந் தன்மை
மருவிய பொறியி லொன்று மாபூத மைந்தி லொன்றுங் கருவிக ணான்கு நீங்காக் கலாதிக ளைந்துங் கூடி யொருபுல னுகரு மிந்த வொழுங்கொழிந் துயிரு மொன்றைத் தெரிவுறா தவனொ ழிந்தத் திரள்களுஞ் செயலி லாவே. தனக்கென வறிவி லாதான் றானிவை யறிந்து சாரான் றனக்கென வறி விலாத வாயிறா னறியா சாரத் தனக்கென வறிவி லாதான் தத்துவ வன்ன ரூபன் தனக்கென வறிவா னாலிச் சகலமு நுகருந் தானே. |
அவிகாரவாதம் சிவாத்துவிதம் என்பவற்றை மறுத்தல்
கண்டுணர் புலன்கள் காணுங் கருத்தினா லொருத்தன் ஞானங் கொண்டுள மறியு மென்னிற் கொள்பவன் முதலி யாகு மண்டிய வுணர்வு யிர்க்கா மன்னிநின் றறியு ெமன்னில் உண்டிட வேண்டு வானுக் கொருவன்வே றுண்ட லாமே. |
சித்தாந்தம்
இருணனி யிரவி தான்வந் திரித்தலு மிரவி லெண்ணும் பொருணிலை கண்டு மாந்தர் பொருந்திடு மாறு போல மருணிலை யெங்கு நீங்க மகிழ்ந்துயிர் தன்னுண் மன்னு மருளையு மொழிய ஞாலத் தறிந்தவா றறியு மன்றே. அறிந்திடு மனாதி வாயி லானவை யவன்ற னாலே யறிந்திடு மென்று மொன்று மறிந்திடா வவைபோலி யாவும் அறிந்திடு மறியுந் தன்மை யறிந்திட கன்மத் தொன்மை யறிந்தவை நுகரு மாறு மருளுவ னமலன் றானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், தன்மை, தானே, சித்தாந்த, தனக்கென, சாத்திரங்கள், சிவப்பிரகாசம், லாதான், மாறு, அறிந்திடு, வறிவி, றறியு, கண்டு, இலக்கியங்கள், தொன்று, தன்னி, யாகு