சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
3. சுத்தாவத்தை
இனையபல பிறவிகளி னிறந்துபிறந் தருளா லிருவினைகள் புரிந்தருந்து மிதுசகலம் அகலா முனமருவு மிருபயனு மொருகாலத் தருந்த முந்துநுக ருந்துபய னந்தமுற வந்த வினையுமெதிர் வினையுமுடி வினையுதவு பயனா னேராக நேராதன் மேவுங் கான்முற் சினமருவு திரோதாயி கருணையாகித் திருந்தியசத் திநிபாதந் திகழு மன்றே. நாடியசத் திநிபாத நாலு பாத நண்ணும்வகை யெண்ணரிய ஞான பாதங் கூடுமவர் தமக்குணர்வாய் நின்ற ஞானக் கூத்தனொரு மூர்த்திகொடு குறுகி மோக நீடியகே வலசகல நிகழாவாறு நிறுத்திமல மறுக்குமிது நிலையார் சுத்தங் கேடி புகழ் தருஞ்சரியை கிரியா யோகக் கேண்மையரே லிவையுணர்த்தக் கிளக்கு நூலே. |
முத்தி பேதங்கள்
அரிவையரின் புறுமுத்தி கந்த மைந்து மறுமுத்தி திரிகுணமு மடங்கு முத்தி விரவுவினை கெடுமுத்தி மலம்போ முத்தி விக்கிரக நித்தமுத்தி விவேக முத்தி பரவுமுயிர் கெடுமுத்தி சித்தி முத்தி பாடாண முத்தியிவை பழிசேர் முத்தி திரிமலமு மகலவுயி ரருள்சேர் முத்தி திகழ்முத்தி யிதுமுத்தித் திறத்த தாமே. |
உண்மை அதிகாரம்
இவ்வியலின் வகை
இங்கியவை பொதுவி யம்பு மென்பர்க ளிதன்மேல் ஆன்மாத் தங்கிய அஞ்சவத்தை தன்னுண்மை உணர்த்துந் தன்மை பொங்கொளி ஞான வாய்மை அதன்பயன் புனித னாம மங்கதில் அணைந்தோர் தன்மை யறைகுவ னருளி னாலே. |
1. ஆன்ம வியல்பு
செறிந்திடு முடலுண் மன்னிச் சேர்புலன் வாயில்பற்றி யறிந்ததி லழுந்து மொன்று மறிந்திடா தறியுந்தன்மை பிறிந்தடை வஞ்ச வத்தை பெருகிய மலத்தாற்பேணி யுறுந்தனி யதீத முண்மை யுயிர்க்கென வுணர்த்துமன்றே. உருவுணர் விலாமை யானு மோரொரு புலன்களாக மருவிநின் றறித லானு மனாதிகள் தம்மின் மன்னித் தருபய னுகர்த லானு முயிர்சட மாத லானும் அருவினை யுடலு ளாவி யறிவினா லறியு மன்றே. அறிவெனில் வாயில் வேண்டா வன்றெனி லவைதாமென்னை யறிவவை யுதவு மென்னி லசேதன மவைதாமெல்லாம் அறிபவ னறியுந் தன்மை யருளுவ னென்னி லான்மா வறிவில தாகு மீச னசேதனத் தளித்தி டானே. அறிவினா லறிந்த யாவு மசத்தாத லறிதி யென்றும் அறிவினா லறியொ ணாதே லாவதொன்றின்மை தொன்மை யறி வுதா னொன்றை முந்தி யதுவது வாகக் காணு மறிவுகா ணசத்து மற்ற தறிவினுக் கறியொணாதே. எவ்வறி வசத்த றிந்த தெனிலுயி ரறியா தீசன் அவ்வறி வறியா னல்ல தசேதன மறியா தாவி செவ்விய கருவி கூடில் தெரிவுறா தருளிற் சேரா துவ்விரு வகைய தென்னி லொளியிரு ளொருங்குறாவே. சத்திது வென்ற சத்துத் தானறி யாத சத்தைத் சத்தறிந் தகலவேண்டா வசத்திதுசத்தி தென்றோர் சத்திரு ளொளிய லாக்கண் டன்மைய தாம சத்தைச் சத்துட னின்று நீக்குந் தன்மையாற் சதசத்தாமே. கண்ணொளி விளக்களித்துக் காட்டிடுமென்னின் முன்னங் கண்ணொளி யொன்று மின்றாம் விளக்கொளி கலந்த வற்றைச் கண்ணொளி யகல நின்றே கண்டிடும் வேறு காணாக் கண்ணொளி விளக்கின் சோதி கலந்திடுங் கருத்தொன் றன்றே. ஓரிடத் திருத்தன் மாயா வுருநிறைந் திடுத லொன்றாம் பேரிடத் துறைத றானே பிறங்கறி வாகி நிற்றல் சோர்வுடைச் சடநி கழ்த்த லெனுமிவை சொல்லார் நல்லோ ரோரிடத் துணரு முண்மை யொளிர்தரு முபலம் போலும். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், முத்தி, நூல்கள், கண்ணொளி, தன்மை, சித்தாந்த, சிவப்பிரகாசம், சாத்திரங்கள், அறிவினா, லானு, முண்மை, கெடுமுத்தி, இலக்கியங்கள், மன்றே