சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
4. ஞான வாய்மை
காட்டிடுங் கரண மொன்று மில்லையேற் காணொ ணாதா னாட்டிய விவற்றான் ஞான நணுகவு மொண்ணா முன்னம் ஈட்டிய தவத்தி னாலே யிறையரு ளுருவாய் வந்து கூட்டிடு மிவற்றை நீக்கிக் குரைகழல் குறுகு மாறே. பன்னிறங் கவருந் தொன்மைப் படிகநீ டொளியும் பன்மை மன்னிலங் கியல்புந் தந்த வளரொளி போல வையந் தன்னகம் பயிலு நற்சிற் சடங்களின் றன்மை தாவா நன்னலம் பெறநி றைந்த ஞானமே ஞானமென்பர். மாயைமா யேய மாயா வருமிரு வினையின் வாய்மை யாயவா ருயிரின் மேவு மருளெனி லிருளாய் நிற்கும் மாயைமா யேய மாயா வருமிரு வினையின் வாய்மை யாயவா ருயிரின் மேவு மருளெனி லொளியாய் நிற்கும். |
5. ஞானவாய்மையின் பயன்
தேசுற மருவு மான்ம தெரிசன மான்ம சுத்தி வாசிலா வான்ம லாப மாகமூன் றாகு மூன்றும் பாசம தகல ஞானம் பற்றறான் பணியை நீத்தல் ஏசினே யத்த ழுந்த லெனுமிவற் றடங்கு மன்றே. |
1. ஆன்ம தரிசனம்
தன்னறி வதனா லேதுந் தனக்கறி வில்லை யேனுந் தன்னறி வாக வெல்லாந் தனித்தனி பயன ருந்துந் தன்னறி வறியுந் தன்மை தன்னாலே தனைய றிந்தாற் தன்னையுந் தானே காணுந் தானது வாகி நின்றே. தத்துவ மான வற்றின் தன்மைக ளுணருங் காலை யுய்த்தறிந் திடவு திப்ப தொளிவளர் ஞான மாகும் அத்தன்மை யறிவு மாறு மகன்றிட வதுவா யான்மா சுத்தமாஞ் சுத்த ஞானத் தொருமுத றோன்று மன்றே. |
சத்தி சத்திமான் என்னும் இருமை
உறைதரு முணர்வு மன்றி யதன்முத லுள்ள தென்றிங் கறைவதெ னென்னி லண்ண லருளெனு மதுவே யன்றி நிறையொளி முதல தன்றி நின்றிடா நிமல னாகும் இறைவன் முதல வன்றே னிலங்கருள் சத்தி யாமே. சுத்தமாஞ் சத்தி ஞானச் சுடராகுஞ் சிவமொ ழிந்தச் சத்திதா நின்றா முன்னைத் தகவிலா மலங்கள் வாட்டி யத்தனை யருளு மெங்கு மடைந்திடு மிருள கற்றி வைத்திடு மிரவி காட்டும் வளரொளி போன்ம கிழ்ந்தே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவப்பிரகாசம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், தன்னறி, சிவப்பிரகாசம், வாய்மை, சத்தி, சித்தாந்த, சாத்திரங்கள், மான்ம, நிற்கும், மருளெனி, மன்றே, முதல, சுத்தமாஞ், வினையின், மாயைமா, வளரொளி, இலக்கியங்கள், மாயா, வருமிரு, ருயிரின், யாயவா, மேவு