சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
உள்ளுணர் ஓசை யாகிச் செவியினில் உறுதல் செய்யா(து) ஔ¢ளிய பிராண வாயு விருத்தியை உடைய தன்றித் தௌ¢ளிய அக்க ரங்கள் சிந்திடுஞ் செயல தின்றி மௌ¢ளவே எழுவ தாகும் மத்திமை வேற தாயே. |
41 |
வேற்றுமைப் பட்ட வன்னம் வெவ்வேறு விபாக மாகித் தோற்றுதல் அடைவொ டுக்கிச் சொயம்பிர காச மாகிச் சாற்றிடு மயிலி னண்டம் தரித்திடும் சலமே போன்றங்(கு) ஆற்றவே உடைய தாகிப் பைசந்தி அமர்ந்து நிற்கும். |
42 |
சூக்கும வாக்க துள்ளோர் சோதியாய் அழிவ தின்றி ஆக்கிடும் அதிகா ரத்திற் கழிவினை தன்னைக் கண்டால் நீக்கமில் அறிவா னந்தம் முதன்மைநித் தியமு டைத்தாய்ப் போக்கொடு வரவி ளைப்பும் விகாரமும் புருட னின்றாம். |
43 |
நிகழ்ந்திடும் வாக்கு நான்கு நிவிர்த்தாதி கலையைப் பற்றித் திகழ்ந்திடும் அஞ்ச தாகச் செயல்பரி ணாம மன்று புகழ்ந்திடும் விருத்தி யாகும் படங்குடி லானாற் போல மகிழ்ந்திடும் பிரம மன்று மாமாயை என்பர் நல்லோர். |
44 |
வித்தைகள் வித்தை ஈசர் சதாசிவர் என்றி வர்க்கு வைத்துறும் பதங்கள் வன்னம் புவனங்கள் மந்தி ரங்கள் தத்துவம் சரீரம் போகம் கரணங்கள் தாமெ லாமும் உய்த்திடும் வைந்த வந்தான் உபாதான மாகி நின்றே. |
45 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சித்தியார், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, வன்னம், மன்று, தின்றி, இலக்கியங்கள், உடைய, ரங்கள்